சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி அம்மா உணவகம் கிடையாது.. சென்னையில் சூறையாடிய மர்ம நபர்கள்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை சென்னையில் உள்ள அம்மா உணவகத்திற்குள் புகுந்த சிலர், அங்கிருந்த அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை பிடுங்கி, நடுரோட்டில் எறிந்து உடைத்து போட்டனர். பின்னர் இனி அம்மா உணவகம் என்ற பெயரெல்லாம் கிடையாது என்று ஆவேசமாக கூறியபடி சென்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    சென்னையில் இனி அம்மா உணவகம் எல்லாம் கிடையாது.. சூறையாடி மர்ம நபர்கள்.. வைரல் வீடியோ

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

    பத்தாண்டுக்குப் பின் திரைக்கு வந்து.. பட்டையைக் கிளப்பிய மாஸ் படம்.. அரங்கு குலுங்கும் காட்சிகளுடன்!பத்தாண்டுக்குப் பின் திரைக்கு வந்து.. பட்டையைக் கிளப்பிய மாஸ் படம்.. அரங்கு குலுங்கும் காட்சிகளுடன்!

    திமுக கூட்டணி தமிழகம் முழுவதும் பெருவாரியான இடங்களில் வென்றுள்ளது. இன்னும் ஒரிரு நாளில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

    அம்மா உணவகம்

    அம்மா உணவகம்


    இந்த சூழலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, இப்போது ஆட்சியை இழந்துள்ளது. இந்த சூழலில் சென்னையில் சிலர் அம்மா உணவத்திற்கு புகுந்த சூறையாடி உள்ளனர். இனி அம்மா உணவகம் என்ற பெயரில் உணவகங்கள் இருக்ககூடாது என்று பெயர் பலகைகளை உடைத்து போட்டு அங்கிருந்தவர்களை மிரட்டினர்.

    திமுகவினர் செய்ததாக புகார்

    திமுகவினர் செய்ததாக புகார்


    சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த செயலை செய்தவர்கள் திமுகவினர் தான் என்று அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

    பெயர் மாறுமா

    பெயர் மாறுமா

    பொதுவாக ஆட்சி மாறும் போது அவர்களின் பெயர்களில் இருக்கும் நலத்திட்ட உதவிகள் அப்படியே பெயர் மாற்றம் அடைவது இந்தியா முழுவதும் இயல்பாகி வருகிறது. அந்த வகையில் அம்மா உணவகம் பெயர் கலைஞர் உணவகம் என்று மாறுமா அல்லது அதே பெயரில் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கைகொடுக்கும் அம்மா உணவகம்

    கைகொடுக்கும் அம்மா உணவகம்

    தற்போது கொரோனா தொற்று பரவி வரும் வேளையில் ஊரடங்கு போடப்படுகிறது. ஊரடங்கு நாட்களில் ஏழை தொழிலாளர்களுக்கு, அம்மா உணவகம் பெரிதும் கைகொடுத்து வருகிறது. எனவே அந்த சேவை தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மா உணவகத்தில் புகுந்து மர்ம நபர்கள் பெயர்பலகையை உடைத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Mysterious people who broke the name board of Amma unavagam in Chennai and looted video viral on social media/
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X