என்னது.. அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் தீர்ந்து போச்சா.. களத்தில் குதித்த நாம் தமிழர் கட்சி
சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு ரத்த தானம் அளிக்க நாம் தமிழர் கட்சி முயன்று வருகிறது
சென்னை: இதுதான் நாம் தமிழர் கட்சிக்கும், மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்! சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் இல்லையாம்.. விஷயத்தை கேள்விப்பட்டதும், களத்தில் குதித்து ரத்த சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் அக்கட்சி தொண்டர்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சீமான் தனித்து போட்டியிட்டாலும் தோல்வியையே தழுவினார். ஆனால் மக்கள் மனதில் ஓரளவு நிலைத்து நிற்க ஆரம்பித்துவிட்டார். திராவிட கட்சிகளையே முழுமையாக நம்பி இருந்த மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு தன்பக்கம் இழுக்க தொடங்கிவிட்டார்.
இதனால் 1.07 சதவீதத்தில் இருந்து 3.87 சதவீதம் வரை வாக்கு வங்கியை உயர்த்தி விட்டார். தமிழக அரசியலில் 4-வது இடத்தையும் எட்டிபிடித்து விட்டார். இதற்கு முழு, முதற் காரணம் சீமானின் பேச்சும்.. அக்கட்சியினர் கையில் எடுத்து வரும் பிரச்சனைகள்தான்!

தீர்ந்து போய்விட்டது
இப்போதுகூட தோற்று போய்விட்டோம் என்று அவர்கள் சோர்ந்துபோய் முடங்கி போய்விடவில்லை. இன்றைக்கு காலையில் இவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது எப்பவுமே கையிருப்பில் ரத்த வங்கியில் ரத்தம் இருக்கும். ஆனால் இன்றைக்கு இது முற்றிலும் காலியாகி விட்டதாம். அதனால் ரத்தம் ஸ்டாக்கில் இல்லாததால், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிக்கல் உள்ளதாக சென்னை அரசு பொது மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

பிரபாகரன்
இந்த அறிவிப்பை கேட்டதுமே நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் விறுவிறு பணியில் இறங்கிவிட்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உடனடியாக ரத்த தான அழைப்பு விடுக்கப்பட்டது. பிரபாகரன் பிறந்த நாளுக்கு வருடா வருடம் இந்த கட்சியினர் ரத்த தானம் செய்வது வழக்கம்.

குருதி கொடை பாசறை"
அவ்வாறு தானமாக அளிக்கும் ரத்தங்களை சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் தருவதும் வழக்கம். இப்படி ரத்த தானத்திற்காகவே நாம் தமிழர் கட்சி "குருதி கொடை பாசறை" என்ற ஒன்றை இயக்கி வருகிறது.

சபாஷ்
இப்படி ஒரு பாசறை மற்ற கட்சிகளில் இருக்கிறதா, இல்லையா, அவை செயல்பாட்டில்தான் உள்ளனவா என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தேர்தல் தோல்வியை எல்லாம் தூக்கி தூரமாக போட்டுவிட்டு, அவர்களது கடமையை துரிதமாக செய்ய ஆரம்பித்துவிட்டதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications