1,000 பேர் ரூ1,000 கட்சி நிதி-சீமான் அறிவிச்சு ஆச்சு 8 வருஷம்.. சேர்ந்தது 209 பேரு.. 'சாட்டை' வேதனை!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்த கட்சி நிதி சேர்ப்பு திட்டத்துக்கு 8 ஆண்டுகளில் 209 பேர் மட்டுமே ஒத்துழைப்பு தந்துள்ளதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசியதாவது: விஜயகாந்த் மறைந்த போது சமூக வலைதளங்களில் ஒரு செய்தி இடம் பெற்றது. ஒரு நல்லவரை இழந்துவிட்டோம்.. ஒரு நல்லவரை இழந்துவிட்டோம் என்பதுதான் அது.

அதே செய்திக்கு கீழே கமெண்ட்டாகப் போடப்பட்டிருந்தது 'ஒரு நல்லவரை இழந்துவிட்டோம்.. இன்னொரு நல்லவரை இழந்துவிடக் கூடாது' என்பது. அப்படி எழுதியவர்கள் யாரும் நாம் தமிழர் கட்சி கிடையாது. தனிப்பட்ட முறையில் மட்டுமே நேர்மையாளர் விஜயகாந்த். ஆனால் கொள்கையில், கோட்பாட்டில், சித்தாந்தத்தில், அரசியலில் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் சீமான். அவரை இழந்துவிடக் கூடாது என்றுதான் ஒவ்வொருத்தனும் பதிவு செய்தான்.
வளர்ந்துவிட்டது நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சி வளர்ந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது எனில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு போகும் போது, 8-வது வகுப்பு சிறுவன் ஒரு பேருந்தில் இருந்து கையை நீட்டி அண்ணே அடுத்து நாமதாண்ணே என சொல்லும் அளவுக்கு நாம் தமிழர் கட்சி வளர்ந்திருக்கிறது. இளைய தலைமுறையிடம் போய் சேர்ந்துவிட்டது.
8 வருஷத்தில் 209 பேர்தான்.. : கட்சியில் மிக முக்கியமான பங்கு வகிப்பது பொருளாதாரம். 2015-ம் ஆண்டு பொதுக்குழு என நினைக்கிறேன். இதே சென்னையில் சீமான் சொன்னார்.. 1,000 பேர் ரூ1,000 திட்டம்.சொல்லி கிட்டத்தட்ட 8 வருஷம் ஆச்சு. 1,000 பேர் ரூ1,000 திட்டத்தில் இதுவரை எத்தனை பேர் சேர்ந்துள்ளார்கள் தெரியுமா? இதுவரைக்கும் 209 பேர்தான் சேர்ந்துள்ளனர். 8 வருஷத்தில.. நான் மாதம் மாதம் ரூ2,000 தருகிறேன்.
முதலில் வருமானம்.. : 1,000 பேர் கூட நாம் தமிழர் கட்சிக்கு மாதம் ரூ1,000 தர முடியாதா? முடியும். ஆனால் செய்யலை.. ரூ1,000 திட்டத்தில் 1,000 பேரும் இடம்பெறுவதுதான் முதல் வெற்றி. ஒரு கட்சிக்கு மாதம் ரூ10 லட்சம் கூட வருமானம் வரவில்லை எனில்.. 1,000 பேர் ரூ1,000 திட்டம் நம்மிடம் இருந்தால் நாம் யாரிடமும் கை நீட்ட வேண்ட தேவை இல்லை. நாம வெல்லப் போறோம்.. கோட்டையை பிடிக்கப் போறோம்.. அதெல்லாம் அடுத்த கட்டம். முதலில் கட்சிக்கான வருமானத்தை இந்த 1,000 பேர் ரூ1,000 திட்டத்தின் மூலம் கொண்டு வாங்க.. அதைச் சொல்லத்தான் நான் பொதுக்குழுவுக்கே வந்தேன். நன்றி வணக்கம். இவ்வாறு சாட்டை துரைமுருகன் கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications