Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு திமிர்த்தனமானது: சீமான் கடும் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது திர்மித்தனமானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் இன்று சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும். பாகுபாடு இல்லாமல் குடிநீர், சுகாதாரம், மருத்துவம் வழங்குவதுதான் அரசாங்கத்தின் கடமை.

சென்னை: ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது திர்மித்தனமானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில் இன்று சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும். பாகுபாடு இல்லாமல் குடிநீர், சுகாதாரம், மருத்துவம் வழங்குவதுதான் அரசாங்கத்தின் கடமை. நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சுங்க கட்டணங்கள் செலுத்தி பொதுமக்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை கலாஷேத்ராவில் உண்மை எதுவும் இல்லாமல் மாணவர்கள் போராட்டம் நடத்தி இருக்க வாய்ப்பில்லை. கலாஷேத்ரா தொடர்பாக நேர்மையாக, நீதியான விசாரணை நடத்த வேண்டும். கலாஷேத்ரா பிரச்சனையில் குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழருக்காக குரல் கொடுக்கிறோம் நாங்கள். எங்களை நீங்கள் பாசிஸ்ட் என அழைத்தால் ஆம் நாங்கள் பாசிஸ்ட்தான். இதனையே திரும்ப திரும்ப சொல்வோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போராடிய மக்களுக்கு வெளிநாட்டு பண உதவி கிடைத்தது என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது திமிர்த்தனமான பேச்சு. இத்தகைய பேச்சுகளுக்கு சரியான பாடம் கிடைக்கும். இவ்வாறு சீமான் கூறினார். முன்னதாக சீமான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆணவத்திலும், அகம்பாவத்திலும் எதுவுமே தெரியாது, அரைவேக்காட்டுத்தனமாக உளறலாமா? போராட்டத்தில் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்ட மக்களைப் பணத்தை வாங்கிக் கொண்டு போராடியதாகக் கூறி அவதூறு சேற்றை வாரியிறைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, 40க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவுவாங்கியும் இணையச் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதற்குக் காரணமென்ன? ஆளுநரது மொழி நடையில், அதற்கும் பணம்தான் காரணமென எடுத்துக் கொள்ளலாமா? பணத்திற்காகக் கங்காணி வேலைசெய்வதும், அதிகார வர்க்கத்தின் ஏவல் பிரிவாகச் செயல்பட்டு, சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பது ஆளுநருக்கு வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம்; இனமானத் தமிழர்களுக்கு இல்லை! தமிழர்களின் வரிப்பணம் தரும் வருவாயில் உண்டுக் கொளுத்துவிட்டு, தமிழர்களை இழித்துரைத்துப் பேசுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. பெரும் பெரும் ஆட்சியாளர்களையே அடக்கி ஒடுக்கி, அடிபணிய வைத்த தமிழ் மண்ணிது. இந்தியப் பெருநாட்டிற்கே அரசியல் திசைவழிக் காட்டும் பெருமிதமிக்க தமிழர் நிலமிது. ஆகவே, தமிழர்களை சீண்டிப் பார்க்கும் வேலையை, இத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டுமென அன்போடு அறிவுறுத்துகிறேன். இல்லாவிட்டால், தமிழ் மக்கள் தகுந்தப் பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன் என கூறியிருந்தார் சீமான்.

நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சுங்க கட்டணங்கள் செலுத்தி பொதுமக்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை கலாஷேத்ராவில் உண்மை எதுவும் இல்லாமல் மாணவர்கள் போராட்டம் நடத்தி இருக்க வாய்ப்பில்லை. கலாஷேத்ரா தொடர்பாக நேர்மையாக, நீதியான விசாரணை நடத்த வேண்டும். கலாஷேத்ரா பிரச்சனையில் குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழருக்காக குரல் கொடுக்கிறோம் நாங்கள். எங்களை நீங்கள் பாசிஸ்ட் என அழைத்தால் ஆம் நாங்கள் பாசிஸ்ட்தான். இதனையே திரும்ப திரும்ப சொல்வோம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போராடிய மக்களுக்கு வெளிநாட்டு பண உதவி கிடைத்தது என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது திமிர்த்தனமான பேச்சு. இத்தகைய பேச்சுகளுக்கு சரியான பாடம் கிடைக்கும். இவ்வாறு சீமான் கூறினார்.

சென்னை: ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது திர்மித்தனமானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில் இன்று சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும். பாகுபாடு இல்லாமல் குடிநீர், சுகாதாரம், மருத்துவம் வழங்குவதுதான் அரசாங்கத்தின் கடமை. நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சுங்க கட்டணங்கள் செலுத்தி பொதுமக்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை கலாஷேத்ராவில் உண்மை எதுவும் இல்லாமல் மாணவர்கள் போராட்டம் நடத்தி இருக்க வாய்ப்பில்லை. கலாஷேத்ரா தொடர்பாக நேர்மையாக, நீதியான விசாரணை நடத்த வேண்டும். கலாஷேத்ரா பிரச்சனையில் குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழருக்காக குரல் கொடுக்கிறோம் நாங்கள். எங்களை நீங்கள் பாசிஸ்ட் என அழைத்தால் ஆம் நாங்கள் பாசிஸ்ட்தான். இதனையே திரும்ப திரும்ப சொல்வோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போராடிய மக்களுக்கு வெளிநாட்டு பண உதவி கிடைத்தது என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது திமிர்த்தனமான பேச்சு. இத்தகைய பேச்சுகளுக்கு சரியான பாடம் கிடைக்கும். இவ்வாறு சீமான் கூறினார். முன்னதாக சீமான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆணவத்திலும், அகம்பாவத்திலும் எதுவுமே தெரியாது, அரைவேக்காட்டுத்தனமாக உளறலாமா? போராட்டத்தில் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்ட மக்களைப் பணத்தை வாங்கிக் கொண்டு போராடியதாகக் கூறி அவதூறு சேற்றை வாரியிறைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, 40க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவுவாங்கியும் இணையச் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதற்குக் காரணமென்ன? ஆளுநரது மொழி நடையில், அதற்கும் பணம்தான் காரணமென எடுத்துக் கொள்ளலாமா? பணத்திற்காகக் கங்காணி வேலைசெய்வதும், அதிகார வர்க்கத்தின் ஏவல் பிரிவாகச் செயல்பட்டு, சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பது ஆளுநருக்கு வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம்; இனமானத் தமிழர்களுக்கு இல்லை! தமிழர்களின் வரிப்பணம் தரும் வருவாயில் உண்டுக் கொளுத்துவிட்டு, தமிழர்களை இழித்துரைத்துப் பேசுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. பெரும் பெரும் ஆட்சியாளர்களையே அடக்கி ஒடுக்கி, அடிபணிய வைத்த தமிழ் மண்ணிது. இந்தியப் பெருநாட்டிற்கே அரசியல் திசைவழிக் காட்டும் பெருமிதமிக்க தமிழர் நிலமிது. ஆகவே, தமிழர்களை சீண்டிப் பார்க்கும் வேலையை, இத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டுமென அன்போடு அறிவுறுத்துகிறேன். இல்லாவிட்டால், தமிழ் மக்கள் தகுந்தப் பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன் என கூறியிருந்தார் சீமான்.

முன்னதாக சீமான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆணவத்திலும், அகம்பாவத்திலும் எதுவுமே தெரியாது, அரைவேக்காட்டுத்தனமாக உளறலாமா? போராட்டத்தில் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்ட மக்களைப் பணத்தை வாங்கிக் கொண்டு போராடியதாகக் கூறி அவதூறு சேற்றை வாரியிறைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, 40க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவுவாங்கியும் இணையச் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதற்குக் காரணமென்ன? ஆளுநரது மொழி நடையில், அதற்கும் பணம்தான் காரணமென எடுத்துக் கொள்ளலாமா? பணத்திற்காகக் கங்காணி வேலைசெய்வதும், அதிகார வர்க்கத்தின் ஏவல் பிரிவாகச் செயல்பட்டு, சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பது ஆளுநருக்கு வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம்; இனமானத் தமிழர்களுக்கு இல்லை! தமிழர்களின் வரிப்பணம் தரும் வருவாயில் உண்டுக் கொளுத்துவிட்டு, தமிழர்களை இழித்துரைத்துப் பேசுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. பெரும் பெரும் ஆட்சியாளர்களையே அடக்கி ஒடுக்கி, அடிபணிய வைத்த தமிழ் மண்ணிது. இந்தியப் பெருநாட்டிற்கே அரசியல் திசைவழிக் காட்டும் பெருமிதமிக்க தமிழர் நிலமிது. ஆகவே, தமிழர்களை சீண்டிப் பார்க்கும் வேலையை, இத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டுமென அன்போடு அறிவுறுத்துகிறேன். இல்லாவிட்டால், தமிழ் மக்கள் தகுந்தப் பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன் என கூறியிருந்தார் சீமான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+