UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள்
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வென்ற 60 பேரில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக மட்டும் 56 பேர் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் 39 பேர் அரசு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் என்றும், இதற்கு முக்கியமான காரணம் நான் முதல்வன் டீம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான காலியிடங்கள் யுபிஎஸ்சி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் மொத்தமாக 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் இறுதித்தேர்வான நேர்காணல்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் இருந்து 140 பேர் பங்கேற்றிருந்தனர்.

அதில் தமிழ்நாட்டில் இருந்து 60 பேர் மொத்தமாக யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் 10 ஆண்டுகளுக்கு பின் டாப் 10 இடங்களில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி 2வது இடத்தையும், ராஜா மொகைதீன் 7வது இடத்தையும் பிடித்து அசத்தி இருக்கின்றனர். இது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.
ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. இம்முறை அது அதிகரித்திருக்கும் சூழலில், மற்றொரு முக்கியமான தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற 60 பேரில் 56 பேர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் இயக்குநர் டாக்டர் சங்கர சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 60 பேரில் நான் முதல்வன் திட்டத்தில் இருந்து மட்டுமே 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் அரசு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் மட்டும் 39 பேர். இதுவொரு நல்ல ரிசல்ட்.. அதேபோல் ராஜேஸ்வரி 2வது இடம் பிடித்துள்ளார்.
ராஜா மொகைதீன் 7வது இடம் பிடித்துள்ளார். இன்னொரு நபர் 18வது இடம் பிடித்திருக்கிறார்.. கடந்த 10 ஆண்டுகளில் டாப் 20 இடங்களில் 3 பேர் வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். நான் முதல்வன் திட்டம் என்பது வேறு எந்த மாநிலமும் செய்யாத ஒன்றாகும். அதாவது Prelims தேர்வில் வென்றால் ரூ.7,500 மாதந்தோறும் அளிக்கப்படுகிறது.

அதேபோல் மெயின்ஸ் தேர்வில் வெற்றிபெற்ற பின் ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் அளிக்கப்படுகிறது. நேர்காணலுக்கு ரூ.75 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இம்முறை நேர்காணலில் பங்கேற்பதற்கு முன் அரசு பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக மட்டும் 111 பேர் வந்தனர். நான் முதல்வன் திட்டத்தில் அவர்களுக்கு ஃபெல்லோஷிப் கொடுத்த பின், அவர்கள் எந்த பயிற்சி மையத்தில் வேண்டுமானாலும் சென்று படித்திருக்கலாம்.
இதனால் அரசு பயிற்சி மையத்தின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம் நான் முதல்வர் டீம். அவர்கள் கொடுக்கும் அகாடமிக் பயிற்சி வேறு எங்கும் இருக்காது. வழக்கமாக தனியார் பள்ளி, தனியார் மருத்துவமனை நன்றாக இருக்கும் என்பார்கள் அல்லவா.. ஆனால் ஐஐடி மாதிரி நம்பகத்தன்மை அரசு பயிற்சி மையம் மீது வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இதன் கிராஃப் அதிகரித்து கொண்டே செல்கிறது.. அதற்கு நான் முதல்வன் டீம் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
-
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு!











Click it and Unblock the Notifications