UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள்
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வென்ற 60 பேரில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக மட்டும் 56 பேர் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் 39 பேர் அரசு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் என்றும், இதற்கு முக்கியமான காரணம் நான் முதல்வன் டீம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான காலியிடங்கள் யுபிஎஸ்சி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் மொத்தமாக 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் இறுதித்தேர்வான நேர்காணல்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் இருந்து 140 பேர் பங்கேற்றிருந்தனர்.

அதில் தமிழ்நாட்டில் இருந்து 60 பேர் மொத்தமாக யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் 10 ஆண்டுகளுக்கு பின் டாப் 10 இடங்களில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி 2வது இடத்தையும், ராஜா மொகைதீன் 7வது இடத்தையும் பிடித்து அசத்தி இருக்கின்றனர். இது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.
ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. இம்முறை அது அதிகரித்திருக்கும் சூழலில், மற்றொரு முக்கியமான தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற 60 பேரில் 56 பேர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் இயக்குநர் டாக்டர் சங்கர சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 60 பேரில் நான் முதல்வன் திட்டத்தில் இருந்து மட்டுமே 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் அரசு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் மட்டும் 39 பேர். இதுவொரு நல்ல ரிசல்ட்.. அதேபோல் ராஜேஸ்வரி 2வது இடம் பிடித்துள்ளார்.
ராஜா மொகைதீன் 7வது இடம் பிடித்துள்ளார். இன்னொரு நபர் 18வது இடம் பிடித்திருக்கிறார்.. கடந்த 10 ஆண்டுகளில் டாப் 20 இடங்களில் 3 பேர் வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். நான் முதல்வன் திட்டம் என்பது வேறு எந்த மாநிலமும் செய்யாத ஒன்றாகும். அதாவது Prelims தேர்வில் வென்றால் ரூ.7,500 மாதந்தோறும் அளிக்கப்படுகிறது.

அதேபோல் மெயின்ஸ் தேர்வில் வெற்றிபெற்ற பின் ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் அளிக்கப்படுகிறது. நேர்காணலுக்கு ரூ.75 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இம்முறை நேர்காணலில் பங்கேற்பதற்கு முன் அரசு பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக மட்டும் 111 பேர் வந்தனர். நான் முதல்வன் திட்டத்தில் அவர்களுக்கு ஃபெல்லோஷிப் கொடுத்த பின், அவர்கள் எந்த பயிற்சி மையத்தில் வேண்டுமானாலும் சென்று படித்திருக்கலாம்.
இதனால் அரசு பயிற்சி மையத்தின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம் நான் முதல்வர் டீம். அவர்கள் கொடுக்கும் அகாடமிக் பயிற்சி வேறு எங்கும் இருக்காது. வழக்கமாக தனியார் பள்ளி, தனியார் மருத்துவமனை நன்றாக இருக்கும் என்பார்கள் அல்லவா.. ஆனால் ஐஐடி மாதிரி நம்பகத்தன்மை அரசு பயிற்சி மையம் மீது வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இதன் கிராஃப் அதிகரித்து கொண்டே செல்கிறது.. அதற்கு நான் முதல்வன் டீம் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
-
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications