சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு.. நாகர்கோவில் மாணவன் கணேஷ்குமார் தமிழகத்தில் முதலிடம்
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற மாணவர், தமிழக அளவில் முதலிடம் பிடித்தார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வாணையத்தின் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு நடத்தி அதில் தேர்வாகும் நபர்கள் அந்தந்த பதவியில் அமரவைக்கப்படுகிறார்கள்.

முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்காணல் ஆகிய 3 கட்டங்களை கொண்டது இந்த தேர்வு. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு, அதாவது பிரிலிமினரி தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றோர் பிரதான தேர்வை எழுதினர்.
அதில் தேர்வு செய்யப்பட்டோரை நேர்காணலுக்கு அழைப்பதற்கு முன்னர் கொரோனா பரவல் காரணமாக இந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் நேர்முகத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இறுதித் தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. இதில் 180 பேர் ஐஏஎஸ் பணியிடங்களையும் 150 பேர் வெளியுறவுத் துறை பணியிடங்களையும் 24 பேர் ஐபிஎஸ் பணியிடங்களையும் தேர்வு செய்தனர்.
தமிழகத்தில் இருந்து 44-க்கும் மேற்பட்டோர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். பார்வைக் குறைபாடு உடைய இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரைச் சேர்ந்த பூர்ண சுந்தரி மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பால நாகேந்திரன் ஆகிய இருவரும் தேர்ச்சி அடைந்தார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications