தமிழ்நாடு பாஜகவில்.. நயினார் நாகேந்திரன் மகனுக்கு முக்கிய பொறுப்பு! திடீர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் தற்போது நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழக பாஜகவின் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் மகனுக்கு, கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
வாரிசு அரசியல் குறித்து பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. திமுகவை எதிர்க்க பாஜக கையில் எடுத்திருக்கும் மிகப்பெரிய விமர்சன ஆயுதம் வாரிசு அரசியல்தான். இப்படி இருக்கையில், தமிழக பாஜக தலைவரின் மகனுக்கு கட்சியில் புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அமைப்பாளராக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர 25 அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து நயினார் நாகேந்திரன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது வழக்கறிஞர் பிரிவுக்கு குமரகுரு, தொழில்துறை வல்லுநர்கள் பிரிவுக்கு சுந்தர் ராமன், மருத்துவப் பிரிவுக்கு பிரேம்குமார், தொழிற் பிரிவுக்கு பாலகிருஷ்ணன், கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு பெப்சி சிவகுமார் மீனவர் பிரிவுக்கு சீமா, கல்வியாளர் பிரிவுக்கு நந்தகுமார், நெசவாளர் பிரிவுக்கு செல்வராஜ், அண்ணாதுரை, படைவீரர்கள் பிரிவுக்கு கர்னல் ராமன் உள்ளிட்டோர் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications