Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்.. பெண்களுக்கு லட்சம் லட்சமாக.. அள்ளித்தரும் தமிழக அரசு.. அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மகளிரின் பெயரில் செயல்படுத்தப்படும். விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5 இலட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.

நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கான திட்டம் ஆகும். பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்காக தமிழ்நாடு அரசு மூலம் உருவாக்கப்பட்ட திட்டமாகும். விவசாய நிலம் வாங்க நிலத்தின் அரசு சார்பாக பணம் வழங்கப்படும்.

tamil nadu government notification magalir urimai thogai

மானியம்: இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திட்டச் செலவில் அதிகபட்சம் 50% அல்லது ரூ. 5. இலட்சம் மானியமாக வழங்கப்படும்.

தகுதி என்ன?: இந்த திட்டத்திற்கான தகுதிகள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி விண்ணப்பதாரர் 18-55 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர் எந்த விவசாய நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும்.

இந்த திட்டம் முழுக்க முழுக்க விவசாயம் செய்வதற்கு மட்டுமே வழங்கப்படும். பெண்கள் விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

நிபந்தனைகள்: இந்த திட்டத்தின் கீழ் என்ன மாதிரியான நிபந்தனைகள் இருக்கும்.. என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1. விண்ணப்பதாரர் 18-55 வயதுக்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த விவசாய நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும்

2. அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.

3. விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்க உத்தேசித்துள்ள உறுதி செய்துள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம்.

4, நிலத்தின் விலை சந்தை மதிப்பீட்டின்படி நிர்ணயிக்கப்படும்

5. முத்திரை தான் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.

6. வாங்கிய நிலம் பத்து ஆண்டுகளுக்குள் விற்கப்படக்கூடாது.

7. பயனாளிகள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் கடனாக பெற்று நிலம் வாங்கலாம்.

8. விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடைமையாளர்களாக உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்ட இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. . மகளிரின் பெயரில் செயல்படுத்தப்படும். விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5 இலட்சம் மானியம் வழங்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+