"எத்தியோபியா ஏன் போனீங்க.." விழித்த நபரின் காலணி, கோட்டில் இருந்து ரூ 100 கோடி ஹெராயின் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரு பயணியிடம் ரூ.100 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    போதைப் பொருள் தடுப்பு தீவிரம்... இரவில் வேலூர் கலெக்டர், எஸ்.பி. திடீர் சோதனை!

    தமிழகத்தில் கஞ்சா பயன்பாட்டை முற்றிலும் ஒடுக்கும் வகையில், கடந்த 11-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், முதலமைச்சர் அறிவுரை வழங்கியிருந்தார். முதலமைச்சரின் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் கஞ்சாவை தடுக்கு தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விமான நிலையத்தில் சோதனை

    விமான நிலையத்தில் சோதனை

    இந்நிலையில், எத்தியோப்பியா நாட்டிலிருந்து பெரும் அளவு போதை பொருள் சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், ஆப்பிரிக்கா நாடான எத்தியொப்பியா நாட்டின் அடீஸ் அபாபா நகரிலிருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்.

    இந்தியர் மீது சந்தேகம்

    இந்தியர் மீது சந்தேகம்

    இதில் இந்தியரான இக்பால் பாஷா என்ற பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தடுத்தி நிறுத்தி விசாரித்தனர். எதற்காக ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியன் சென்று வருகிறார்? என்று கேட்டனா். அதற்கு அந்த பயணியால், சரியான பதில் அளிக்க முடியவில்லை. இதை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனர்.

    ரூ.100 கோடி மதிப்பிலான கஞ்சா

    ரூ.100 கோடி மதிப்பிலான கஞ்சா


    அப்போது அவர் அணிந்திருந்த காலணிகள் மற்றும் உள்ளாடைகள், அவர் அணிந்திருந்த கோர்ட்டுக்குள் ரகசியப்பை அறைகள் என்று பல்வேறு இடங்களில் மொத்தம் 9 கிலோ 590 கிராம் எடையுடைய கொக்கைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய் 100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அதிகாரிகள் அதிர்ச்சி

    அதிகாரிகள் அதிர்ச்சி

    இந்த நிகழ்வு சுங்க அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கியது. சென்னை விமான நிலையம் 1932 ஆம் ஆண்டு உருவாகிய பின்பு, இதுவரை இந்த அளவு ஒரே பயனிடம் ஒரே நேரத்தில் ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்ததே கிடையாது. இதுவே முதல் முறை. இதை அடுத்து அந்தப் பயணியை கைது செய்த சுங்கத்துறையினா், ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருளையும் பறிமுதல் செய்து, அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

    சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

    இவர் இந்த ரூ.100 கோடி மதிப்புடைய போதை பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்து, எங்கெங்கெல்லாம் கடத்த இருந்தாா். இவர் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்துகிறது. சென்னை விமான நிலையத்தில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+