"35+15+10.." இதுதான் என்டிஏ கூட்டணியின் தொகுதி பங்கீடு கணக்கு.. எடப்பாடி எடுக்க போகும் முடிவு என்ன!
சென்னை: திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வரும் நிலையில், அதிமுக பக்கம் அது குறித்து பேச்சே வராமல் இருக்கிறது. இதற்கிடையே பிரதமர் மோடி இப்போது பிரச்சாரத்திற்காகத் தமிழ்நாடு வந்துள்ள சூழலில், பிரதமர் பயணத்திற்கு பிறகே பிறகே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 23ம் தேதி நடந்த என்டிஏ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்டிஏ தலைவர்களும் மேடை ஏறினார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக தலைவர் டிடிவி தினகரன் தங்களின் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக ஒரே மேடையில் ஏறினர். என்டிஏ கூட்டணியின் வலிமையை உணர்த்தவே இந்த கூட்டம் நடந்தது.

பிரதமர் மோடி
இருப்பினும், அதன் பிறகு கூட்டணி பிரச்சாரம் டல்லடிக்க ஆரம்பித்தது. இப்போது பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வந்து சென்றுள்ள நிலையில், மீண்டும் என்டிஏ கூட்டணி உத்வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மேலும், என்டிஏ கூட்டணியை முன்கூட்டியே உறுதி செய்தாலும் கூட இன்னும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கவில்லை. அது எப்போது என்பதில் தெளிவு இல்லாத சூழல் இருக்கும் நிலையில், மோடியின் இந்த பயணத்திற்கு பிறகே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் எனத் தெரிகிறது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இதை உறுதி செய்தார்.
இந்தத் தேர்தலில் அதிமுகவே அதிக இடங்களில் போட்டியிடும்.. அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் திட்டமாக இருக்கும் சூழலில், அதற்குத் தேவையான இடங்களில் போட்டியிடும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதிப் பங்கீடு
பாஜகவை பொறுத்தவரை 2024 லோக்சபா தேர்தல் வாக்குகளை வைத்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதிமுகவிடம் இருந்து அதிகபட்ச இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும் என்பதே பாஜகவின் திட்டமாக இருக்கிறது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனச் சொல்லப்படுகிறது.. அதிமுக இன்னும் தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அறிவிக்கவில்லை என்பதும் இங்குக் கவனிக்கத்தக்கது..
என்டிஏவுடன் இருப்பதால் பாஜக உடனேயே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துவிட்டார். அதிமுக தலைமையுடன் பேசுவதற்கு அவர் தாயாராக இல்லை. கூட்டணியில் இணைந்தாலும் கூட இரு தரப்பிற்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
பாஜக கேட்கும் இடங்கள்
பாஜக 50 இடங்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் 35 இடங்கள் வரை பாஜக இறங்கி வரலாம் எனச் சொல்லப்படுகிறது. அதற்குக் கீழ் போக பாஜக ரெடியாக இல்லை. மறுபுறம் டிடிவி தினகரன் குறைந்தபட்சம் 15 சீட் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். குறிப்பாகத் தென்தமிழகத்தில் குறைந்தது 10 இடங்களில் போட்டியிட அமமுக விரும்புகிறது.
அன்புமணி ராமதாஸ்
அதேபோல அன்புமணி ராமதாஸ் 10 இடங்களைக் கேட்கிறார்.. இரட்டை இலக்கத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்றக் கழகம் போன்ற சிறிய கூட்டணிக் கட்சிகளும் பாஜக உனேடேய இப்போது பேச்சுவார்த்தை நடத்துகிறது. அவர்கள் தலா இரண்டு இடங்களைக் கேட்டுள்ளதாம். இது தாண்டி புதிய தமிழகம் உள்ளிட்ட வேறு கட்சிகளையும் உள்ளே கொண்டு வர பாஜக முயல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
அரசியல் முட்டு சந்தில் ராமதாஸ்.. அதிமுகவுடன் கூட்டணியா? கேட்டை மூடிய எடப்பாடி.. அடிவருடிகள் அப்செட்! -
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
விரைவில் சட்டசபை தேர்தல்.. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி எச்சரிக்கை! -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
தீயாய் வேலை செய்யும் திமுக..ஆமை வேகத்தில் அதிமுக! இப்படியே போனால் அவ்வளவு தான்? எடப்பாடிக்கு பிரஷர்! -
திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்.. கைத்தாங்கலாக தூக்கி வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
சட்டசபை தேர்தல் தேதி விரைவில்.. தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி அரசாணை வெளியீடு! -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா?














Click it and Unblock the Notifications