கடும் சோதனை.. நாடு முழுவதும் துவங்கிய ‛நீட்’ தேர்வு.. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று மதியம் துவங்கியது. தமிழ் உள்பட 13 மொழிகளில் நடைபெறும் தேர்வை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். வழக்கம்போல் தீவிர சோதனைக்கு பிறகு மாணவ-மாணவிகள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் மருத்துவ படிப்பு பயில நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுத வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் உள்ள போதிலும் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் மே 7 ல் (அதாவது இன்று) நடைபெறும் நீட் தேர்வுக்கு ஏற்கனவே மாணவ-மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. அதில் மாணவ, மாணவிகள் எந்த நகரத்தில் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தியா முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் 14 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் படித்தவர்களாவாக உள்ளனர். மணிப்பூரில் இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் அங்கு இன்று நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் மணிப்பூரை தவிர்த்த இந்தியாவின் பிற பகுதிகளில் இன்று மதியம் நீட் தேர்வு துவங்கியது. மொத்தம் 499 நகரங்களில் நீட் தேர்வு துவங்கியது. மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இன்றைய நீட் தேர்வு என்பது தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வை பொறுத்தமட்டில் மாணவ-மாணவிகள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த முறையும் அது தொடர்ந்தது. கடும் சோதனைக்கு பிறகே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீட் தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள்செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications