Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடும் சோதனை.. நாடு முழுவதும் துவங்கிய ‛நீட்’ தேர்வு.. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று மதியம் துவங்கியது. தமிழ் உள்பட 13 மொழிகளில் நடைபெறும் தேர்வை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். வழக்கம்போல் தீவிர சோதனைக்கு பிறகு மாணவ-மாணவிகள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் மருத்துவ படிப்பு பயில நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுத வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது.

NEET exam is going to be held today in India, 1.50 lakhs students will appeared from Tamil Nadu

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் உள்ள போதிலும் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் மே 7 ல் (அதாவது இன்று) நடைபெறும் நீட் தேர்வுக்கு ஏற்கனவே மாணவ-மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. அதில் மாணவ, மாணவிகள் எந்த நகரத்தில் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தியா முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் 14 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் படித்தவர்களாவாக உள்ளனர். மணிப்பூரில் இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் அங்கு இன்று நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் மணிப்பூரை தவிர்த்த இந்தியாவின் பிற பகுதிகளில் இன்று மதியம் நீட் தேர்வு துவங்கியது. மொத்தம் 499 நகரங்களில் நீட் தேர்வு துவங்கியது. மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இன்றைய நீட் தேர்வு என்பது தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வை பொறுத்தமட்டில் மாணவ-மாணவிகள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த முறையும் அது தொடர்ந்தது. கடும் சோதனைக்கு பிறகே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீட் தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள்செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+