குழந்தையின் நலனுக்காக... மீண்டும் சேர போகிறோம்.. டிக்டாக்கால் பிரிந்த தம்பதி அறிவிப்பு

டிக்டாக்கால் பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைய போவதாக கூறியுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தையின் நலனுக்காக பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர போவதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியை சேர்ந்த தம்பதி மகேஷ் - திவ்யா. இவர்கள் தங்கள் வீட்டை எதிர்த்து கடந்த 2008-ம் ஆண்டு காதல் கல்யாணம் செய்து கொண்டார்கள்.

Nellai Couple wants to reunit

கடந்த 2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

திவ்யாவுடன் குழந்தை வளர்கிறான். இந்நிலையில், நெல்லை சரணாலயத்தில் செயல்படும் "குழந்தைகள் நலகுழு" வில் மகேஷ் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறும், மனைவி தன்னை விட்டு பிரிய காரணம், Smule, Facebook மற்றும் டிக்டாக் போன்றவைதான்" என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார்.

இந்த செய்தி பல்வேறு மீடியாக்களில் வெளியிடப்பட்டது. நாமும் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், மகேஷ்-திவ்யா தம்பதியினர் நம்மை தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது, இருவரும் மீண்டும் இணைய போவதாக தெரிவித்துள்ளனர். குழந்தையின் நலனுக்காகவே இப்படி ஒரு முடிவை எடுத்ததாக இந்த தம்பதி சொல்வதை கேட்க நமக்கு உண்மையிலேயே மகிழ்ச்சிகரமாக உள்ளது. வாழ்த்துக்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+