ஒரு இந்திய பிரஜை ஏன்ம்மா சீன பிரதமருக்கு கடிதம் எழுதணும்?. லாஜிக்கே இல்லாமல் பேசறீங்க.. நெட்டிசன்கள்
சென்னை: ஒரு இந்திய பிரஜை சீன பிரதமருக்கு ஏன்ம்மா லெட்டர் எழுத வேண்டும் என காயத்ரி ரகுராமுக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் கமல்ஹாசன் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர் கடிதம் எழுதியிருந்ததை பாஜகவில் உள்ள நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது பதிவில், சீன அதிபருக்கும் தப்லீஜி ஜமாத் அமைப்பினருக்கும் ஏன் கடிதம் எழுதவில்லை என கேட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் சரியான பதிலடியை கொடுத்துள்ளனர்.
|
சித்தாந்தங்கள்
மரியாதை நிமித்தமாக கடிதம் எழுதியதில் எந்த தவறும் இல்லை. இந்திய குடிமகன் ஏன் ஜீ ஜின்பிங்கிற்கு கடிதம் எழுத வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும். உங்கள் தனிப்பட்ட கோப தாபங்கள், மாறுப்பட்ட சித்தாந்தங்களை அரசியலில் கொண்டு வருவதை ஒரு போதும் ஏற்க முடியாது என இந்த வலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
வார்த்தையில் கவனம் தேவை
அறிவுடன் தான் பேசுகிறீர்களா, ஜீ ஜின்பிங்கிற்கு நாம் ஏன் கடிதம் எழுத வேண்டும்? உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உங்கள் கட்சி தலைவரிடம் சொல்லுங்கள். பிரதமருக்கு கடிதம் எழுதுவதை தடுக்க நீங்கள் யார், அவர் நம்முடைய பிரதமர். இருவருக்கு மத்தியில் நீங்கள் யார். வார்த்தையை அளந்து பேசுங்கள் என கேட்டுள்ளார்.
|
கேள்வி கேட்கக் கூடாதா
முடிந்தால் அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறவும். அதை விட்டுவிட்டு கேள்வி கேட்பதே தவறு என்று பேசாதீர்கள் என்கிறார் இந்த வலைஞர்.
|
பிரதமரின் பணி
சூப்பர் காயத்ரி. நான் ஒரே கேள்வி உங்களை கேட்கிறேன். இது போன்று ட்வீட் போடுவதற்கு முன்னர் குறைந்த பட்சம் அறிவுக் கூட உங்களுக்கு இருக்காதா. மோடி அரசுதான் இந்தியாவை ஆள்கிறது. மற்றவர்கள் அல்ல, முதலில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பணியை தெரிந்து கொண்டு பேசுங்கள்.
|
இஎம்ஐ
இந்தியா முழுவதும் 4 மணி நேரத்தில் ஊரடங்கை அறிவித்தது யார்? மாநில அரசுக்கு நிதியை குறைந்த அளவில் ஒதுக்கியது யார்? போக்குவரத்தின்றி நடக்க வைத்தது யார்? இஎம்ஐ மட்டும் தள்ளிவைத்துவிட்டு, வட்டி சுமையை மக்கள் தலையில் சுமத்தியது யார்? மத்திய அரசு தானே. பிரதமரை கேட்காமல் யாரை கேட்பது?
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்









Click it and Unblock the Notifications