சுஜித்துக்காக கண்ணீர் கடலில் மிதக்கும் தேசம்.. உன் உயிரை பணயம் வைத்து பாடம் புகட்டிவிட்டாயே!
Recommended Video
சென்னை: சுஜித் உன் உயிரை பணயம் வைத்து பாடம் புகட்டிவிட்டாய் என நெட்டிசன்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது குழந்தை சுஜித். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டு தோட்டத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார்.
சுமார் 88 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து நெட்டிசன்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
நாள் முழுக்க உடன் இருந்தார்.. சுஜித் உடலை பார்த்து உடைந்து அழுத எம்பி ஜோதிமணி.. உருக்கம்!
|
சாம்பியன்
குழந்தை போல் விளையாடினாய்
சாம்பியன் போல் போராடினாய்
ஹீரோ போல் இறந்தாய்
குட் பை சுஜித்
எங்களை மன்னித்துவிடு
|
உயிருடன் இல்லை
அன்புள்ள சுஜித்
நீ இப்போது உயிருடன் இல்லை
எங்களுடன் நீ வாழ்ந்திருக்கிறாய்
ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரிய பாடத்தை கற்பித்துவிட்டு சென்றுள்ளாய்
இந்த தேசத்துக்கு பாடம் சொல்லிக் கொடுக்க உன் உயிரை பணயம் வைத்திருக்கிறாய்
நீ தான் உண்மையான ஹீரோ
நீ போர் வீரன்
விவரிக்க வார்த்தைகள் இல்லை
இந்தியா விழித்தெழ வேண்டிய நேரம். இனி அப்பாவி சுஜித்களை நாம் இழக்கக் கூடாது.
|
கடவுள்
தற்போது மழை பெய்து வருகிறது. பருவநிலையும் அப்படியே மாறிவிட்டது. சுஜித்தின் மரணத்தின் மீது கடவுள் கூட ஏதோ சொல்ல நினைக்கிறார் என்றே கருத தோன்றுகிறது. அனைத்து பெற்றோர்களுக்கும் சிறந்த பாடம்.
|
இழப்பு
சுஜித்தின் இறப்பு அவரது பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. சின்னஞ்சிறிய குழந்தைக்காக ஒட்டுமொத்த நாடே துக்கம் அனுசரிக்க வேண்டும்.