மும்பை தாராவியாக மாறிய சென்னை ஐஐடி.. திடீரென ஹாட்ஸ்பாட்டான சம்பவம்.. காரணம் இதுதான்.. நெட்டிசன்கள்
சென்னை: மும்பை தாராவியைவிட ஐஐடியில் கொரோனா வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகம்தான் என சமூகவலைதளங்களில் மக்கள் தங்கள் கருத்தை முன்வைக்கிறார்கள்.
சென்னை கிண்டியில் ஐஐடி நிறுவனத்தில் இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் இங்கு கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியது.
ஹாட்ஸ்பாட்டாக மாறிய இந்த நிறுவனம் குறித்து மக்கள் கூறும் கருத்துகளை பார்ப்போம்.
|
பாடம் கற்க
தெற்கு பீகாரின் மத்திய பல்கலைக்கழகம் ஆப்லைனில் தேர்வுகளை நடத்தியே தீருவோம் என பிடிவாகத்தால் ஏற்பட்ட வினையா. பெரிய பல்கலைக்கழகங்களிடம் இருந்து இவர்கள் பாடம் கற்றுக் கொள்ள மாட்டார்களா?
|
முன்னுரிமை
அதென்ன சென்னை ஐஐடியில் மட்டும் கொரோனா பரிசோதனை, மற்ற பல்கலைக்கழகங்களிலும் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பேராசிரியர்கள், மாணவர்களின் உடல்நிலைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
|
கொரோனா பாதிப்பு
ஐஐடியில் இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐஐடி கேன்டீனில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததே இதற்கு காரணம்.
|
சமூக இடைவெளி
மோசமான நிர்வாகம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காததே இதற்கு காரணமாக இருக்கலாம். இதே நிலைதான் மும்பை தாராவியிலும் நடந்தது. ஆனால் மும்பை தாராவியை விட ஐஐடி சென்னையில் கேஸ்கள் அதிகம்.
|
பாதுகாப்பு நடவடிக்கைகள்
மிகப் பெரிய நிறுவனமான ஐஐடியில் அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட இல்லாதது பைத்தியக்காரத்தனம்.