ரயில் கேன்சல்.. எக்ஸாம் போயிடுச்சே.. கலங்கிய மாணவர்! உடனே கார் ரெடி செய்த ரெயில்வே துறை.. செம!
சென்னை: மழையின் காரணமாக ரெயில் ரத்து செய்யப்பட்டாலும், ரெயில்வே அதிகாரிகள் செய்த உதவியால் உரிய நேரத்தில் மற்றொரு ரெயிலை பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்ததாக ஐ.ஐ.டி மெட்ராஸ் மாணவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவால் பலரும் ரெயில்வே நிர்வாகத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் உதவி வருவது ரெயில் பயணம் தான் என்றால் மிகயாகாது. அந்த அளவுக்கு அவர்களது வாழ்க்கை பயணத்தோடு நெருங்கிய தொடர்பு ரெயிலுக்கு உண்டு.
ஏனெனில் குறைந்த கட்டணம், பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணம் போன்ற காரணத்தால் மக்கள் அதிகம் நாடுவது ரெயிலைத்தான். இத்தகைய ரெயில் பயணத்தில் பயணிகள் பலரும் மறக்க முடியாத நினைவுகளையும் கசப்பான நிகழ்வுகளையும் சந்தித்திருக்கக் கூடும்.

சென்னை ஐ.ஐ.டி மாணவர்
அந்த வகையில் மழையால் ரெயில் ரத்து செய்யப்பட்டாலும், ரெயில்வே அதிகாரிகள் செய்த உதவியால் உரிய நேரத்தில் மற்றொரு ரெயிலை பிடித்து சென்னைக்கு வந்து சேர்ந்ததாக சென்னை ஐ.ஐ.டி மாணவரான சத்யம் என்பவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

கடைசி நேரத்தில் ரெயில் ரத்து செய்யப்பட்டது
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐ.ஐ.டி மெட்ராஸில் ஏரோனெட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறேன். சென்னை செல்வதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகர் ரெயில் நிலையம் வந்தேன். நான் செல்ல விருந்த ரெயில், கனமழையால் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கிய காரணத்தால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
வதோதரா சென்று அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டு இருந்தேன். ஆனால், சரியான நேரத்தில் வதோதரா செல்வது எப்படி என தெரியாமல் திகைத்து நின்றேன். அப்போது இதைக்கவனித்த ரெயில்வே அதிகாரிகள், ஒருவர், உடனடியாக ஒரு காரை வாடகைக்கு எடுத்து என்னை அனுப்பி வைத்தனர்.

சரியான நேரத்திற்கு அழைத்து சென்றார்
அந்த வாடகை கார் ஓட்டுநரும் என்னை கவலைப்படாதீர்கள்... உரிய நேரத்தில் வதோதராவுக்கு போய் விடலாம் எனக்கூறி சரியான நேரத்தில் வதோதரா ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
வதோதரா ரெயில் நிலையத்தில் நான், இறங்கியதும் அங்கிருந்த ரெயில்வே அதிகாரிகள் நான் செல்ல இருக்கும் ரெயில் எந்த பிளாட்பாரத்தில் நிற்கிறது எனக் கண்டுபிடிக்க உதவி செய்தனர். எனது லக்கேஜ்களையும் எடுத்துவர உதவினர்.

ரெயில்வேக்கு பாராட்டு
ரெயில்வே அதிகாரிகளின் இத்தகைய உதவியால் நான் சரியான நேரத்தில் ரெயிலை பிடிக்க முடிந்தது. ரெயில்வே அதிகாரிகளின் இந்த செயல் ஒவ்வொரு பயணியின் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது' என்றார்.
பயணி மீது ரயில்வே அதிகாரிகள் காட்டிய இந்த அக்கறை சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்திய ரெயில்வே நிர்வாகத்தின் செயலை பாராட்டி வருகின்றனர்.
வதோதரா ரெயில்வே நிர்வாகத்தின் டுவிட்டர் பக்கமும் சத்யம் பகிர்ந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
போடு தகிட தகிட.. அடுத்த ஆக்சனுக்கு தயாரான ICF! ரெடியாகுது வந்தே பாரத் சரக்கு ரயில்! எல்லாம் மாறுதே! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications