Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரி யார்? லிஸ்ட்டில் 3 பேர்! யாருக்கு வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்களை கொண்ட பரிந்துரை பட்டியலை தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சத்யபிரதா சாஹு ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னதாக, ராஜேஷ் லக்கானி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார்.

election commission chief electoral officer tamil nadu

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வரும் சத்யபிரதா சாஹூவிற்கு கூடுதல் பொறுப்பாக விலங்குகள் நலம், கால்நடை பராமரித்துறை மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், சத்யபிரதா சாஹு விரைவில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி நியமிக்கப்படும் வரை அவர் இந்தப் பொறுப்பில் தொடர்வார்.

தமிழ்நாட்டுக்கான புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியை நியமிக்கும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதன்மைச் செயலர் மற்றும் அதற்கு கூடுதல் நிலையில் உள்ள, தேர்தல் அதிகாரியாக விருப்பமான அதிகாரிகள் 3 பேரின் பெயா்கள் அடங்கிய பட்டியலை தமிழக அரசிடம் இருந்து இந்திய தோ்தல் ஆணையம் பெற்றுள்ளது.

தர்மேந்திர பிரதாப் யாதவ், மங்கத் ராம் சர்மா மற்றும் மற்றொரு மூத்த அதிகாரி என 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயா்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாள்களில் புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி குறித்த அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிடும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ் தற்போது, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக (டான்சிட்கோ) தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். மங்கத் ராம் சர்மா ஐ.ஏ.எஸ். தற்போது பொதுப்பணித்துறை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர்களில் ஒருவர் தலைமை தேர்தல் அதிகாரியாக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

election commission chief electoral officer tamil nadu

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் நடைமுறைகள், சிறப்பு முகாம் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியல் அடிப்படையில், திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வரும் அக்டோபர் 29 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+