Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் டிக்கெட், பான் கார்டு.. இன்று முதல் மொத்தமாக மாறும் ரூல்ஸ்.. மக்களே இது தெரியாமல் இருக்காதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 1 புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில் இன்று முதல் நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களில் விதிகள் மாற உள்ளன. குறிப்பாக டோல்கேட்களில் இன்று முதல் ரொக்கமாக பணம் செலுத்த முடியாது.. பான் கார்டு விண்ணப்பிக்க கூடுதல் சான்றிதழ்கள், வங்கி விதிகள், புதிய தொழிலாளர் சட்டம் என பல விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பாஸ்டேக் வருடாந்திர கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 60 சுங்கசாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வருடாந்திர பாஸ் கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3075 ஆக உயர்ந்துள்ளது.

New Financial Rules from April 1 No Cash at Toll Gates PAN Banking amp amp Tax Changes

பான் கார்டு ரூல்ஸ்:

பான் கார்டு விண்ணப்பிக்க இனி ஆதார் மட்டும் போதாது. இனி பான் கார்டு விண்ணப்பிக்க அடையாளம் மற்றும் வயது சான்றுக்குக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பள்ளி சான்றிதழ் உள்ளிட்டவைகளை சமர்பிக்க வேண்டியிருக்கும்.

வங்கி ரூல்ஸ்:

ஹெச்.டி.எப்.சி வங்கி, ஏப்ரல் 1, 2026 முதல் யுபிஐ பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுத்து வந்ததை இலவசம் என்பதை மாற்றி, தனது இலவச வரம்பில் சேர்க்க உள்ளது. இதன்படி இனி யுபிஐ வழியாக பணம் எடுத்தாலும் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். முதல் ஐந்து பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.

பந்தன் வங்கி, பெருநகரங்களில் மூன்று இலவசப் பரிவர்த்தனைகளையும், பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளையும் வழங்கும். இதற்கு மேல், ரூ.23 கட்டணமும், தோல்வியுற்ற பரிவர்த்தனைகளுக்கு ரூ.25 கட்டணமும் வசூலிக்கப்படும்.

வங்கிக் கட்டணங்கள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விதிகளில் மாற்றங்கள் வருகின்றன. யுபிஐ, கார்டு அல்லது வாலட் மூலம் பணம் செலுத்தும் போது பாதுகாப்பு இனி ஓடிபி (OTP) மட்டும் போதாது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு சரிபார்ப்பு (Two-factor authentication) கட்டாயமாக்கப்படுகிறது.

புது வருமான வரி சட்டம்

இன்று முதல் 1961 வருமான வரி சட்டத்துக்கு பதிலாக, புதிய வருமான வரிச் சட்டம் 2025 நடைமுறைக்கு வருகிறது. தணிக்கை செய்ய தேவையில்லாத வரி செலுத்துவோர், தங்கள் ITR-3 மற்றும் ITR-4 படிவங்களை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தாக்கல் செய்ய முடியும்.

புதிய தொழிலாளர் சட்டம்

இன்று முதல் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி நிறுவனங்கள், ஒருவரின் மொத்த ஊதியத்தில் (CTC) குறைந்தது 50% அடிப்படைச் ஊதியமாக வைக்க வேண்டும். இதனால் பி.எஃப் & பணிக்கொடை தொகையும் கணிசமாக அதிகரிக்கும். ஆனால், கையில் வாங்கும் மாத ஊதியம் குறைய வாய்ப்பு உள்ளது.

ரயில்வே டிக்கெட் ரத்து

ரயில் பயணிகளுக்கான டிக்கெட் ரத்து விதிகளிலும் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் ரயில் புறப்படுவதற்கு 8 முதல் 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீத தொகை திரும்பக் கிடைக்கும். இதுவே 24 முதல் 72 மணி நேரத்திற்குள் செய்தால் 75 சதவீத தொகை திரும்பக் கிடைக்கும். 72 மணி நேரத்துக்கு முன்பு ரத்து செய்தால் அதிகபட்ச ரீஃபண்ட் வழங்கப்படும் என கூற்பபட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+