ரயில் டிக்கெட், பான் கார்டு.. இன்று முதல் மொத்தமாக மாறும் ரூல்ஸ்.. மக்களே இது தெரியாமல் இருக்காதீங்க
சென்னை: ஏப்ரல் 1 புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில் இன்று முதல் நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களில் விதிகள் மாற உள்ளன. குறிப்பாக டோல்கேட்களில் இன்று முதல் ரொக்கமாக பணம் செலுத்த முடியாது.. பான் கார்டு விண்ணப்பிக்க கூடுதல் சான்றிதழ்கள், வங்கி விதிகள், புதிய தொழிலாளர் சட்டம் என பல விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பாஸ்டேக் வருடாந்திர கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 60 சுங்கசாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வருடாந்திர பாஸ் கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3075 ஆக உயர்ந்துள்ளது.

பான் கார்டு ரூல்ஸ்:
பான் கார்டு விண்ணப்பிக்க இனி ஆதார் மட்டும் போதாது. இனி பான் கார்டு விண்ணப்பிக்க அடையாளம் மற்றும் வயது சான்றுக்குக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பள்ளி சான்றிதழ் உள்ளிட்டவைகளை சமர்பிக்க வேண்டியிருக்கும்.
வங்கி ரூல்ஸ்:
ஹெச்.டி.எப்.சி வங்கி, ஏப்ரல் 1, 2026 முதல் யுபிஐ பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுத்து வந்ததை இலவசம் என்பதை மாற்றி, தனது இலவச வரம்பில் சேர்க்க உள்ளது. இதன்படி இனி யுபிஐ வழியாக பணம் எடுத்தாலும் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். முதல் ஐந்து பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.
பந்தன் வங்கி, பெருநகரங்களில் மூன்று இலவசப் பரிவர்த்தனைகளையும், பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளையும் வழங்கும். இதற்கு மேல், ரூ.23 கட்டணமும், தோல்வியுற்ற பரிவர்த்தனைகளுக்கு ரூ.25 கட்டணமும் வசூலிக்கப்படும்.
வங்கிக் கட்டணங்கள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விதிகளில் மாற்றங்கள் வருகின்றன. யுபிஐ, கார்டு அல்லது வாலட் மூலம் பணம் செலுத்தும் போது பாதுகாப்பு இனி ஓடிபி (OTP) மட்டும் போதாது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு சரிபார்ப்பு (Two-factor authentication) கட்டாயமாக்கப்படுகிறது.
புது வருமான வரி சட்டம்
இன்று முதல் 1961 வருமான வரி சட்டத்துக்கு பதிலாக, புதிய வருமான வரிச் சட்டம் 2025 நடைமுறைக்கு வருகிறது. தணிக்கை செய்ய தேவையில்லாத வரி செலுத்துவோர், தங்கள் ITR-3 மற்றும் ITR-4 படிவங்களை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தாக்கல் செய்ய முடியும்.
புதிய தொழிலாளர் சட்டம்
இன்று முதல் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி நிறுவனங்கள், ஒருவரின் மொத்த ஊதியத்தில் (CTC) குறைந்தது 50% அடிப்படைச் ஊதியமாக வைக்க வேண்டும். இதனால் பி.எஃப் & பணிக்கொடை தொகையும் கணிசமாக அதிகரிக்கும். ஆனால், கையில் வாங்கும் மாத ஊதியம் குறைய வாய்ப்பு உள்ளது.
ரயில்வே டிக்கெட் ரத்து
ரயில் பயணிகளுக்கான டிக்கெட் ரத்து விதிகளிலும் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் ரயில் புறப்படுவதற்கு 8 முதல் 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீத தொகை திரும்பக் கிடைக்கும். இதுவே 24 முதல் 72 மணி நேரத்திற்குள் செய்தால் 75 சதவீத தொகை திரும்பக் கிடைக்கும். 72 மணி நேரத்துக்கு முன்பு ரத்து செய்தால் அதிகபட்ச ரீஃபண்ட் வழங்கப்படும் என கூற்பபட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications