New Low Pressure: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது! சென்னைக்கு திரும்பும் மழை.. 17ம் தேதி சம்பவம் இருக்கு
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி (low pressure) உருவாக வாய்ப்பு உள்ளது எனவும், இதனால் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் சென்னை உள்பட தமிழகம் முழுக்க கனமழை வெளுக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியுள்ளார். ஒரு சில இடங்களில் 12 செண்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இன்றும் நெல்லை, தென்காசியில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இன்று இரவும் தென்காசி மாவட்டத்தில் கடையம், ஆலங்குளம், பொட்டல்புதூர் பகுதியில் கனமழை பெய்தது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வரும் நாட்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. பருவமழையை பொருத்தவரையில் கடந்த மாதம் இயல்புக்கு அதிகமாகவே மழை பெய்தது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் சற்று மழை குறைந்து இருந்தது. ஆனால் இனி வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுக்க
குறிப்பாக நாளை சனிக்கிழமை இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் வழியாக லட்சத்தீவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வரும் 16 ஆம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை தொடங்கும். இதனையடுத்து வரும் 17, 18 ஆம் தேதிகளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து 20 ஆம் தேதி வரை மழையானது பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நாட்களில் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
12 செமீ மழை பெய்யும்
17 மற்றும் 18 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம். ஒரு சில இடங்களில் மிக கனமழை கூட பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது 12 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
புயல் உருவாகக் கூடும்
அதற்கு பிறகும் அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதில் புயல் கூட உருவாக சான்ஸ் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளது.
புயல் உருவானால் அது வட தமிழகத்தில் கரையை கடக்குமா? அல்லது காவிரி டெல்டா பகுதியில் கரையை கடக்குமா? என்பது அதன் நகர்வை பொறுத்து தான் பின்னர் தெரியவரும். இந்த புயலால் நல்ல மழைப்பொழிவு தான் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications