லக்கேஜ் லிமிட் வந்தாச்சு.. தெற்கு ரயில்வே திடீர் கண்டிஷன்! பயணிகள் தெரியாமல் இதை செஞ்சா ஸ்பாட் ஃபைன்
சென்னை: இந்திய ரயில்வேயை பொறுத்தவரை, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஒரு உன்னத போக்குவரத்து சேவையாக விளங்கி வருகிறது. முக்கியமாக பயணிகளின் வசதியையும், நன்மையையும் கருத்தில் கொண்டு ஏகப்பட்ட மாறுதல்களையும், அதிரடிகளையும் மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெற்கு ரயில்வே தற்போது முக்கியப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்ன தெரியுமா?
இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகச் சிறந்த, உன்னதமான போக்குவரத்து சேவையை வழங்கி வருவது இந்திய ரயில்வே துறைதான். ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ரயில் பயணம் என்பது மறக்க முடியாத, ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கக்கூடிய ஒன்றாகவே எப்போதும் இருந்து வருகிறது.

இந்திய ரயில்வே பயணம்
அப்படியான ரயில் பயணத்தின் போது, ஒரு பயணி தன்னுடன் எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்லலாம் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இது தொடர்பாக ஒரு முக்கிய விழிப்புணர்வு வீடியோவை தெற்கு ரயில்வே இப்போது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.. அத்துடன் புதிய லக்கேஜ் விதிகளை விளக்கியும் உள்ளது.
அந்த பதிவில், "பயணத்திற்கு ரெடியா? லக்கேஜ் லிமிட் தெரியுமா? இந்திய ரயில்வேயில் ஒவ்வொரு வகுப்புக்கும் இலவச லக்கேஜ் அளவு உண்டு. கொஞ்சம் கூடுதலாக இருந்தால், கட்டணம் செலுத்தி எடுத்துச்செல்லலாம். ஆனால் லிமிட்டை தாண்டினால் அபராதம் கட்டவேண்டி வரும். அளவோடு 'பேக்' பண்ணுங்க. அசத்தலா பயணம் செய்யுங்க. குறைவான உடைமைகள், நிறைவான பயணம்" என்று மிகவும் சுவாரசியமான ஒரு விழிப்புணர்வு வாசகத்தை தெற்கு ரயில்வே பதிவு செய்துள்ளது.
அத்துடன் பயணிகள் எவ்வளவு எடையுள்ள லக்கேஜ்களை கொண்டு செல்லலாம் என்ற விவரங்கள் அடங்கிய வீடியோவையும் பகிர்ந்துள்ளது.
லக்கேஜ் லிமிட் தெரியுமா
அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள விபரங்களின்படி, "நீங்கள் பயணம் செய்யும் வகுப்பிற்கு ஏற்ப லக்கேஜ் எடை மாறுபடும். முதல் ஏ.சி. வகுப்பு (First AC) பெட்டியில் பயணம் செய்யும் ஒரு பயணி அதிகபட்சமாக 70 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு ஏ.சி.யில் (Second AC) 50 கிலோ வரையிலும் உடைமைகளை இலவசமாக கொண்டு செல்லலாம்.
அதேபோல், 3-ம் வகுப்பு ஏ.சி. (Third AC) பெட்டியில் 40 கிலோ வரையிலும், சாதாரண படுக்கை வசதி கொண்ட (Sleeper Class) பெட்டியில் 40 கிலோ வரையிலும் மற்றும் 2-ம் வகுப்பு அமரும் வகையிலான (Second Seating) பொதுப் பெட்டியில் 35 கிலோ வரையிலும் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக உடைமைகளை எடுத்துச் செல்ல ரயில்வே அனுமதிக்கிறது.
ஏசி ரயில் பெட்டிகள் - கட்டணம் எவ்வளவு
ஒருவேளை உங்களுக்கு கூடுதல் லக்கேஜ் தேவைப்பட்டால், அதற்கு ஒரு குறிப்பிட்ட கூடுதல் அனுமதியும் வழங்கப்படுகிறது. பயணிகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட எடையைத் தாண்டி, கூடுதலாக 10 முதல் 15 கிலோ வரை ரயில்வேயின் விதிமுறைகளுக்கு உட்பட்டு லக்கேஜ் கவுண்டரில் காசு கட்டி எடுத்துச் செல்லலாம்.
இதற்கு சாதாரண உடைமைக் கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கூடுதல் அனுமதி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டு, கட்டணம் செலுத்தப்படும் உடைமைகளுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்பட மாட்டாது.
ஆனால், இந்த இலவச வரம்பு மற்றும் கட்டணம் செலுத்தி கொண்டு செல்லும் கூடுதல் அனுமதி வரம்பையும் தாண்டி மிக அதிகப்படியான உடைமைகளை ரயிலில் எடுத்துச்சென்றாலோ, அல்லது லக்கேஜ் கவுண்டரில் முன்கூட்டியே எந்தவித முன்பதிவும் செய்யாமல் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் ரயிலுக்குள் லக்கேஜ்களை அள்ளிச் சென்றாலோ, ரயில்வே விதிகளின்படி மிகக் கடுமையான அபராத கட்டணம் வசூலிக்கப்படும்" என்று இந்திய ரயில்வே பயணிகளுக்கு மிகத் தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications