என்னை பேசி பேசி செட் பண்ணிட்டாங்க சார்.. கைதாகும் போது போலீசிடம் கெஞ்சிய சந்திரமோகன்.. புது வீடியோ
சென்னை: சென்னை லூப் சாலையில் போலீசாரை மிரட்டிய வேளச்சேரி சந்திரமோகனை போலீசார் கைது செய்ய சென்ற போது அவர்களிடம் கெஞ்சிய புதிய வீடியோ வெளியாகியுள்ளது. என்ன பேசினேன் என்று தெரியவில்லை எனவும் போதையில் அவ்வாறு பேசிவிட்டதாகவும் சந்திரமோகன் வீடியோவில் கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சென்னை மெரினா பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரை நிறுத்திவிட்டு ஆண் - பெண் ஜோடி ஒன்று காருக்கு வெளியே நின்றுகொண்டிருந்தது. மது போதையில் இருந்த அந்த ஜோடியை போலீசார் அங்கிருந்து கிளம்ப சொன்னதாக கூறப்படுகிறது.

அப்போது ஆண் - பெண் ஜோடியினர் அங்கிருந்து செல்ல முடியாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரை ஆபாசமாக பேசியதோடு, பணி செய்ய விடாமல் இடையூறு செய்தனர். இந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த போலீசாரை, செல்பி எடுப்பது போல் போஸ் கொடுத்து நக்கல் செய்தனர். அதோடு, ஒருமையிலும் போலீசாரை பேசியதோடு, என்னை எதுவும் செய்ய முடியாது எனவும், உதயநிதிட்ட பேசவா? என போலீசாருக்கு மிரட்டல் விடுத்து பேசினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்ட ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் யார் என்று விசாரணை தொடங்கினர்.. இதில் போக்குவரத்து போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டது வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன் என்பதும், அந்த பெண் மயிலாப்பூரை சேர்ந்த தனலட்சுமி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் சந்திரமோகனை அதிரடியாக கைது செய்தனர். 4 பிரிவுகளின் கீழ் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சந்திர மோகன், தாங்கள் செய்தது தவறுதான் எனக் கூறி மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்று வெளியானது. இதற்கிடையே, துரைப்பாக்கம் லாட்ஜில் தங்கியிருந்த போது சந்திரமோகனையும் தனலட்சுமியையும் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
போலீசாரை பார்த்ததும் சந்திரமோகன் கெஞ்சும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மதுபோதையில் கோபத்தில் அவ்வாறு பேசிவிட்டதாகவும், வீடியோ எடுத்தவர் பேசிபேசி செட் பண்ணிவிட்டதாகவும் அதனால் கோபத்தில் என்ன வேணா பண்ணிக்க என்று பேசிவிட்டதாகவும் போலீசாரிடம் கெஞ்சினார்.
நாங்கள் பேசியது மட்டும் தான் பதிவாகியிருக்கிறது என்றும் போலீசார் பேசியது இல்லை எனவும் போலீசாரிடம் பவ்வியமாக சந்திரமோகன் விளக்கி கொண்டு இருக்கிறார். என்ன பேசினேன் என்றே எனக்கு நியாபகம் இல்லை. காலையில் வீடியோ பார்த்த பிறகுதான் தெரிந்தது என்றும் சந்திரமோகன் கெஞ்சினார். போலீசார் அவரை கண்டிக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications