பின்னாலிருந்து பாய்ந்து சென்ற கார்.. ஆட்டோ மீது வேகமாக மோதியது.. 9பேர் படுகாயம்..உளுந்தூர்பேட்டையில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருநாவலூர் நோக்கி 8 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.

 Nine people, including an auto driver, were injured near Ulundurpet

இந்த ஆட்டோ, செங்குறிச்சி கிராமம் அருகே செல்லும் போது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன்ராஜ் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 Nine people, including an auto driver, were injured near Ulundurpet

காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையிலேயே நின்றதால் சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

 Nine people, including an auto driver, were injured near Ulundurpet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+