சென்னையை நெருங்கும் நிவர்... தற்போது 250 கிமீ தூரம்.. திடீர் வேகம்.. மாற்றம் நிகழுமா?
சென்னை: நிவர் புயல் சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் தற்போது நிலை கொண்டுள்ளது. முன்னதாக 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த புயல் தற்போது 50 கிலோமீட்டர் முன்னோக்கி வந்துள்ளது. மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி 7 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக நகர்ந்து வருகிறது.
சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும். கடலூரில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 190 கிலோமீட்டர் தூரத்திலும் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு தொடங்கும்
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம், நிவர் புயல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே 145 கிலோமீட்டர் வேகத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்று எச்சரித்துள்ளது.

பாலச்சந்திரன் தகவல்
சற்று முன்னதாக இந்திய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்திக்கும் போது, புயலின் வேகம் 110 கிலோமீட்டர் வேகத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

எங்கெல்லாம் மழை
அதிகனமழையை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம்., செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால பகுதிகளிலும் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

மாற்றம் இருக்குமா?
காற்றின் வேகத்தை பொறுத்தவரை புயல் கரையை கடக்கும் போது 145 கிலோமீட்டர் வேகம் இருக்கக்கூடும். தீவிர நிவர் புயல் அடுத்த ஆறு மணி நேரத்தில் அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என்று அண்மையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நிவர் புயல் கரையை நோக்கி வரும் வேகம் 7 கிலோமீட்டரில் இருந்து 11 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புயல் கரையை கடக்கும் நேரத்தில் பெரிய மாற்றம் இருக்காது. இன்று நள்ளிரவே கரையை கடக்க தொடங்கும் என்றும், நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே புயல் முன்பே கரையை கடக்க வாய்ப்பு இல்லை.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications