Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் மயில்சாமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை.. மருத்துவர்கள் கூறிய காரணம் என்ன?

நடிகர் மயில்சாமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மயில்சாமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவத்துள்ளன.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருபவர் நடிகர் மயில்சாமி. இவர் காமெடி நடிகர் மட்டுமல்லாமல் மிமிக்ரி ஆர்டிஸ்ட், நிகழ்ச்சி தொகுப்பாளர், விவாதங்களில் பங்கேற்பவர், குணசித்திர நடிகர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர்.

இவர் சமூகம் சார்ந்த விஷயங்களை தனது நடிப்பின மூலம் மக்களிடம் எடுத்துச் சென்றார். நடிகர் விவேக் மறைந்த போது மிகவும் உடைந்துவிட்டார். விவேக் குறித்து பிரஸ் மீட்டில் பேசிக் கொண்டிருந்த போது கதறி அழுதார்.

 விவேக்கின் உடல்

விவேக்கின் உடல்

அது போல் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மன்சூர் அலிகானை கட்டி அணைத்து கொண்டு மயில்சாமி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. இல்லாதவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர் மயில்சாமி. 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை கண்டார்.

தோல்வி

தோல்வி

எனினும் அவர் தோல்வியை பற்றி கண்டுகொள்ளாமல் தனது தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தவர். இன்றளவும் தொகுதி மக்களின் பெரும்பாலான துயரங்களை தன்னால் இயன்றவரை துடைத்தவர். இவர் சமூகம் சார்ந்த விஷயங்களில் மட்டுமல்லாமல் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.

சிவபக்தர்

சிவபக்தர்

அவர் தீவிர சிவபக்தர். சிவனுக்கு தொண்டாற்றியவர். சிவராத்திரியை முன்னிட்டு விரதம் இருந்து சிவன்கோயிலுக்கு சென்றுவிட்டுதான் உணவு அருந்துவார். அவர் பெரும்பாலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு செல்லாமல் கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் சிவன்கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

 போரூர் தனியார் மருத்துவமனை

போரூர் தனியார் மருத்துவமனை

இதையடுத்து அவரை போரூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போரூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீஸார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மயில்சாமி உயிரிழப்பு

மயில்சாமி உயிரிழப்பு

தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் மயில்சாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது.

மாரடைப்பு

மாரடைப்பு

அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கெனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

கதறல்

கதறல்

அவரது இறப்பை தாளமுடியாமல் அப்பகுதி மக்கள் கதறி அழுகிறார்கள். சென்னை 2015 புயல், வெள்ளம், மழை, கஜா புயல் காலங்களில் தனது இருப்பிடத்தில் மட்டும் இல்லாமல் டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களுக்கும் உணவு விநியோகித்தவர் மயில்சாமி. உதவும் அளவுக்கு பொருளை அண்ணாமலையார் கொடுத்திருக்கிறார். எனவே இருக்கும் வரை உதவ வேண்டும் என்பதை அடிக்கடி அவர் கூறுவாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+