சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் ஆகஸ்ட் 6 இல் இயக்கப்படாது.. தெற்கு ரயில்வே தகவல்
சென்னை: சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் ஆகஸ்ட் 6 இல் தொடங்கப்படாது என தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில் போல் வேகத்தில் இயங்கும். இந்த ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய உள்ளன. இதில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது.

நெடுந்தூரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த வந்தே பாரத் ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டுமானால் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 மணி நேரம் ஆகும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 5.30 மணிக்கு நேரம்தான் ஆகிறது.
இது போல் முக்கிய நகரங்களில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை- மைசூர், சென்னை-- கோவை, திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து நெல்லை- சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய இணையமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்தார். திண்டுக்கல்- மதுரை- நெல்லை இடையிலான தண்டவாளததை 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக குறையும். அத்துடன் ரயில்வே அறிவித்தபடி ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கம் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் பாஸ்ட் ரயில்கள் மூலம் மேற்கண்ட வழித்தடத்தில் 10 மணி நேரம் பயணிக்கப்படும். வந்தே பாரத் ரயில் செயல்பாட்டிற்கு வந்தால் இந்த பயண நேரம் 8 மணி நேரமாக குறையும் என தெரிகிறது.
நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிகிறது. நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலானது வரும் 6ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவல்களை தெற்கு ரயில்வே மறுத்துள்ளது. மேலும் அந்த வழித்தடத்தில் ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை டூ பெங்களூர், சென்னை டூ கோவை ஆகிய இரு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 3ஆவது ரயிலாக தென் மாவட்டங்களை இணைக்கும் சென்னை- நெல்லை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications