Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசோக் நகர் பள்ளி நிகழ்ச்சியால் சர்ச்சை.. பள்ளிகளுக்கு கல்வித்துறையிடம் இருந்து பறந்த உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசோக்நகர் அரசு பள்ளியில் மதம் சார்ந்த ஆன்மிக சொற்பொழிவு ஆற்றியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பினர் இன்று அந்த பள்ளி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கல்விக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளை அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்த கூடாது. மீறி நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.

அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன. இந்த நிலையில் மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியை முடிவு செய்திருந்தார். இதற்காக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் வரவழைக்கப்பட்டார்.

school spirituality

மகா விஷ்ணு திடீரென சம்பந்தமே இல்லாமல் மறுபிறவி குறித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாவிஷ்ணு பேசுகையில், "மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள். அது போல் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம்" என்று பேசினார்.

அப்போது அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் இதனை கடுமையாக எதிர்த்தார். அப்போது அவர், மகாவிஷ்ணு, அறிவற்றவர் என விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையானது. இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வெளியாகியது. மோட்டிவேஷன் ஸ்பீச் என்ற பெயரில் மகா விஷ்ணு என்பவர் மாணவிகளிடம் ஆன்மிகம் குறித்து சிந்தனைகளை போதித்ததாகவும், மத ரீதியான கருத்துக்களை தெரிவித்ததாகவும் கல்வியாளர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில், கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சியை பள்ளிகளில் நடத்த தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டார். கல்விக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளை அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்த கூடாது. மீறி பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சியை பள்ளிகளில் நடத்த தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டார். கல்விக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளை அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்த கூடாது. மீறி பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்சிகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+