Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடசென்னையில் அசத்தல் மாற்றம்.. வருது முதல் பீச்.. நவீன வசதிகளுடன் ரெடியாகும் தரமான தாழங்குப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட சென்னைக்கு முதன்முறையாக கடற்கரை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. எண்ணூரில் உள்ள தாழங்குப்பம் கடற்கரைக்கு புத்துயிர் அளிக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த பணிகளுக்காக சிறப்புத் திட்டத் துறை சுமார் ₹96 லட்சம் ஒதுக்கியுள்ளது. ஏழு ஏக்கர் கடற்கரையில் தோராயமாக 3.5 ஏக்கர் பரப்பளவில் இந்த பணிகள் நடைபெற உள்ளன.

மெரினா மற்றும் எலியட்ஸ் போன்ற கடற்கரைகள் பல்வேறு மேம்பாடுகளைக் கண்டுள்ளன. நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் நீலக்கொடி சான்றிதழ் முயற்சிகள் என பல வசதிகள் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், வடசென்னைக் கடற்கரைகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. குறுகிய மணல் பரப்புகள் மட்டுமே இருந்ததால், பெரிய அளவிலான மேம்பாட்டுக்கு வாய்ப்பு இல்லை.

marina Chennai

வடசென்னை கடற்கரை

சிறப்புத் திட்டத் துறை அதிகாரிகள் கருத்துப்படி, தாழங்குப்பம் கடற்கரை மட்டுமே முறையான மேம்பாட்டிற்கு உகந்த திறந்த பகுதியாக உள்ளது. இங்கு இருக்கைகள், மூங்கில் சூரிய ஒளிக் குடைகள், கண்காணிப்பு கோபுரங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதிகள், கழிப்பறைகள், குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் விளக்குகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.

வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் வந்து மகிழும் வகையில் கடற்கரையை அமைதியான இடமாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வார இறுதி நாட்களில் 700-800 பேர் கடற்கரைக்கு வருகிறார்கள். மாலை நேரங்களில் 200-300 பேர் வருகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கி, அவர்களின் பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்த உள்ளோம் என்று அரசு தரப்பு கூறி உள்ளது. மீன்பிடி கிராமங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் நடுவில் அமைந்துள்ள இந்தக் கடற்கரையின் மேம்பாடு, மக்களுக்கு ஒரு நல்ல ஓய்வு இடமாக அமையும் என மாநகராட்சி நம்புகிறது.

சென்னை கடற்கரை எங்கே?

முன்னதாக, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA) ஒருங்கிணைந்த கடற்கரை சமூக மேம்பாட்டு திட்டத்தை அறிவித்திருந்தது. இது சென்னை கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்துயிரூட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். திருவெற்றியூர், காசிமேடு, ஈஞ்சம்பாக்கம்-அக்கரை மற்றும் கோவளம் ஆகிய நான்கு பகுதிகளில் உணவு விடுதிகள், சைக்கிள் தடங்கள் மற்றும் திறந்தவெளி திரையரங்குகள் போன்ற விரிவான வசதிகளை அது முன்மொழிந்தது.

கடலோர மேம்பாட்டு திட்டம்: தமிழ்நாடு அரசின் முயற்சி

தமிழ்நாடு அரசு, உலக வங்கி கடனுதவியுடன் ₹1,675 கோடி மதிப்பீட்டில் கடலோர மேம்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள கடலோர பகுதிகள் மேம்படுத்தப்படும். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக கடலோர பகுதிகளை சீரமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றில் சில:

  • நாகப்பட்டினம் மற்றும் சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள் அமைத்தல்.
  • மனோரா, தஞ்சாவூரில் சர்வதேச டுகோங் பாதுகாப்பு மையம் அமைத்தல்.
  • பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் மற்றும் சென்னையில் சதுப்பு நிலத்தை மீட்டமைத்தல்.
  • சதுப்புநிலங்கள், கடல் புல் மற்றும் நீல கார்பன் தீர்வுகளை உருவாக்குதல்.
  • மன்னார் வளைகுடா கரியாச்சல்லி தீவுகளில் அரிப்பு கட்டுப்பாடு மற்றும் பவள மறுசீரமைப்பு செய்தல்.
  • நீலக்கொடி கடற்கரைகளை அமைத்தல்.
  • கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்தல்.
  • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் ஸ்மார்ட் கடற்கரை கிராமங்களை உருவாக்குதல்.
  • எண்ணூர் சிற்றோடை மீட்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
  • கோவளம் கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் திட்டத்திற்கு தமிழகத்தின் முன்னோடி கடற்கரையாகும். இது தமிழக அரசின் ஆதரவுடன் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+