“அடடே..! வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு சூப்பரான செய்தி” - பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
Recommended Video
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
தற்போது வெளிநாடுகளில் வசித்தாலும், வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக கோரப்பட்டு வருகிறது.

என்.ஆர்.ஐ வாக்குரிமை
இந்தியாவில் ஒவ்வொரு பொதுத்தேர்தல் நடக்கும்போதும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெறுவது வழக்கம். தமிழகத்தில் கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவையின்போதும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டவில்லை.

தபால் வாக்கு
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்குரிமையை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
பாதுகாப்புப் படை வீரர்களுக்காக மின்னணு தபால் வாக்குரிமை திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதே திட்டத்தை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நீட்டிப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது தேர்தல் ஆணையர் பேசியிருந்தார்.

தேர்தல் ஆணையத்திடம் பெறப்படுமா?
இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், "வெளிநாடு வாழ் தமிழர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஒரு தெளிவான வரையறையை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவதற்கு துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா" எனக் கேள்வி எழுப்பினார்.

நடவடிக்கை எடுக்கப்படும்
அதற்கு பதிலளித்த வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், "கொரோனா காலத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீடுகளில் இருந்தே வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு இருக்கும் இடத்தில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்குகளிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற துறை சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்" என பதில் அளித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications