ஓகே ஆகுமா கூட்டணி? பாஜகவுடன் பேசும் ஓ பன்னீர் செல்வம் அணி! ரகசியம் உடைத்த பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: அதிமுக தனது கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று ஓ பன்னீர் செல்வம் தனது அணியின் மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்ட நிலையில் அதுபற்றிய முக்கிய தகவலை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி உடைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு கூட்டணியை தொடர பாஜக தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார்.

இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இணைய ஓ பன்னீர் செல்வம் அணி தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று மாலையில் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திடீரென்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், குப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்பட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு தொடங்கி இந்த கூட்டம் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். மேலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டுவது, அணியை மாநிலம் முழுவதும் பலப்படுத்துவது குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் தலைவர்கள் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் அணியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆலோசனை கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். வரும் 11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் சேர்ந்து வரும் 11ம் தேதி விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். இதற்கிடையே உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம்'' என்றார்.
இதையடுத்து, ‛‛நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிறது. இரட்டை இலை சின்னம் உங்களுக்கு கிடைக்குமா? ஏனென்றால் சின்னம் இப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளது'' என கேள்வி எழுப்பட்டது. இதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன், ‛‛வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றார்.

அதன்பிறகு, ‛‛பாஜகவுடன் பேசி வருவதாக சொன்னீர்கள். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான முன்னெடுப்புகள் தொடர்ந்து வருகிறதா?. பாஜகவின் விபி துரைசாமி கூட அதிமுகவடன் கூட்டணியில் தொடர விரும்புவதாக கூறியுள்ளாரே?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன், ‛‛ஒருங்கிணைப்பாளருடன் (ஓ பன்னீர் செல்வம்) பாஜக தலைமை தொடர்பு கொண்டுள்ளதாக கூறியிருக்கிறார். எப்படிப்பட்ட கூட்டணி அமையும் என்பதை நாம் இப்போதே கூறிவிட முடியாது. இந்த விபரங்கள் அனைத்தும் பின்னர் தான் முடிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் 3வது அணி அமையலாம் என பத்திரிகைகளில் எழுதப்படுகிறது. அதனை பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications