Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓகே ஆகுமா கூட்டணி? பாஜகவுடன் பேசும் ஓ பன்னீர் செல்வம் அணி! ரகசியம் உடைத்த பண்ருட்டி ராமச்சந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தனது கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று ஓ பன்னீர் செல்வம் தனது அணியின் மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்ட நிலையில் அதுபற்றிய முக்கிய தகவலை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி உடைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு கூட்டணியை தொடர பாஜக தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார்.

O Panneer Selvam team speaking with BJP for Allaiance, says Panruti Ramachandran

இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இணைய ஓ பன்னீர் செல்வம் அணி தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று மாலையில் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திடீரென்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், குப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்பட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு தொடங்கி இந்த கூட்டம் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். மேலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டுவது, அணியை மாநிலம் முழுவதும் பலப்படுத்துவது குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் தலைவர்கள் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் அணியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆலோசனை கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். வரும் 11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் சேர்ந்து வரும் 11ம் தேதி விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். இதற்கிடையே உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம்'' என்றார்.

இதையடுத்து, ‛‛நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிறது. இரட்டை இலை சின்னம் உங்களுக்கு கிடைக்குமா? ஏனென்றால் சின்னம் இப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளது'' என கேள்வி எழுப்பட்டது. இதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன், ‛‛வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றார்.

O Panneer Selvam team speaking with BJP for Allaiance, says Panruti Ramachandran

அதன்பிறகு, ‛‛பாஜகவுடன் பேசி வருவதாக சொன்னீர்கள். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான முன்னெடுப்புகள் தொடர்ந்து வருகிறதா?. பாஜகவின் விபி துரைசாமி கூட அதிமுகவடன் கூட்டணியில் தொடர விரும்புவதாக கூறியுள்ளாரே?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன், ‛‛ஒருங்கிணைப்பாளருடன் (ஓ பன்னீர் செல்வம்) பாஜக தலைமை தொடர்பு கொண்டுள்ளதாக கூறியிருக்கிறார். எப்படிப்பட்ட கூட்டணி அமையும் என்பதை நாம் இப்போதே கூறிவிட முடியாது. இந்த விபரங்கள் அனைத்தும் பின்னர் தான் முடிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் 3வது அணி அமையலாம் என பத்திரிகைகளில் எழுதப்படுகிறது. அதனை பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+