அமமுக + பாஜக.. ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி! சறுக்கும் அதிமுக!
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக உடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான காலமே இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு அமைத்த கூட்டணியை வைத்தே நாடாளுமன்ற தேர்தலையும் திமுக எதிர்கொள்கிறது. அதேபோல பாஜக 11 தொகுதிகளை குறி வைத்து களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது. சமீபத்தில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்திருப்பதால், அதிமுகவும் தற்போது தனியாக களத்தை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் கூட்டணியை அறிவித்திருக்கிறார். அதாவது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில், இன்று ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஆலோசனை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் 5 சவரன் தங்கச் செயின் பரிசாக வழங்கப்படும் என்று ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமி தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும். பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை தொண்டர்கள் உரிமையை காக்கும் போராட்டம், யுத்தம் தொடரும். பதவி கொடுத்த சசிகலாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் பழனிச்சாமி" என்று கூறினார். பாஜக உடன் கூட்டணி வைப்பீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு, "3ஆவது முறையாக மோடியே பிரதமராக வருவார். வாய்ப்பு தந்தால், டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்" என்று கூறியுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி தரப்பை கடுமையாக பாதிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை பிரித்து கொடுத்ததால் அவர் மீது முக்குலத்தோர் சமுதாயம் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல டிடிவி தினகரன், சசிகலாவை ஓரங்கட்டியதிலும் இந்த அதிருப்தி நீடிக்கிறது.
தென் மாவட்டங்களை பொறுத்த அளவில் மொத்தம் 35 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் திமுக கடந்த முறை 25 தொகுதிகளிலும் அதிமுக 14 தொகுதிகளையும் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் டிடிவி தினகரன் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார். குறிப்பாக ராமநாதபுரம் சிவகங்கை தொகுதிகளில் அதிகமான அளவில் தினகரன் வாக்குகளை வாங்கி இருக்கிறார்.
அதேபோல கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் என ஒன்றாக இருந்தபோதே தென் மண்டலத்தில் மொத்தமுள்ள 10 எம்.பி தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை ஓபிஎஸ்-டிடிவி தினகரன் கைகோர்ப்பது எடப்பாடியை கலக்கத்தில் ஆழ்த்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications