மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்.. கைவிடுகிறதா அரசு.. பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கப்ட்டது. அதேபோல் நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைக்கவும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திட்டமிட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தசூழலில் சென்னை மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் அமலில் உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து, 134 அடி உயரத்தில், ரூ.81 கோடியில் நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவெடுத்து, தமிழக கடலோர மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெற்றது.

Is the plan for the pen-shaped memorial for Karunanidhi in the Marina sea being abandoned

இதையடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் உள்ள கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை கோரியது. பின்னர் கடலில் 360 மீட்டர் தூரத்திற்கு கண்ணாடி நடைபாலத்துடன் கூடிய இந்த சின்னத்தை அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.

ஆனால், தற்போது வரை இதற்கான கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே கருணாநிதிக்கு, மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க அளிக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன் மற்றும் பாரதி ஆகியோர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை முன்னெடுக்கிறதா? அல்லது கை விடுகிறதா? என கேள்வி எழுப்பினார். மேலும், நினைவு சின்னங்கள் அமைப்பதில் தவறு இல்லை, அதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் கடலுக்குள் வைப்பது ஏன்?. கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர் நலன், நினைவுச் சின்னத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தான் செயல்பட முடியும்' என நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் கருத்து தெரிவித்தார்.

இதன்பின்பு, பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் அமலில் உள்ளதா? என்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். ஜூலை 28ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது, சென்னை மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் அமலில் உள்ளதா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+