பெரிய டுவிஸ்டு வைத்த ஓபிஎஸ்.. ஸ்டாலினின் தீர்மானத்துக்கு ஆதரவு! எடப்பாடிக்கு விபரமே தெரியலயாம்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு தானும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட முன்வடிவுகள் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக நிலுவையில் வைத்து இருந்தார். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த நிலையில் எந்த காரணத்தையும் குறிப்பிடாமல் ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த நவம்பர் 13 ஆம் தேதி ஏற்பிசைவு அளிப்பதை நிறுத்தி வைப்பதாக சட்ட முன்வடிவில் குறிப்பிட்டு அதை திருப்பி அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் இதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அதில் விதி 143 இன் கீழ் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட முன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மறு ஆய்வு செய்திடும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு திமுக எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், பாமக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர்.

வாக்கெடுப்புக்கு முன்பாகவே பாஜகவும் அதை தொடர்ந்து அதிமுகவும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இறுதியாக இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவை ஒத்தி வைக்கப்பட்ட பின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இன்றைய சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் 15 வது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 தீர்மானங்களையும், திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட முன்வடிவுகளையும் மீண்டும் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது.

இதற்கு நாங்கள் ஆதரவு அளித்து உள்ளோம். ஏற்கனவே ஜெயலலிதாவின் பெயர் பல்கலைக்கழகத்துக்கு வைக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதையும் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். மீண்டும் இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் ஜெயலலிதாவின் பெயரோடுதான் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த விபரம் கூட தெரியாமல் அவர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். பொதுவாகவே ஆளும் அரசுக்கும் ஆளுநருக்கும் பரஸ்பர உறவு, தொடர்பு இருக்க வேண்டும் என்பதே நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது." என்றார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!












Click it and Unblock the Notifications