தென் மண்டலத்தை வலுவாக்க குறி.. "கொங்கு" டூ "தேனி".. 25 மா.செ.க்கள் தாவ ரெடியாமே? எப்போது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள மாவட்டச் செயலாளர்களில் 25 பேரை தட்டி தூக்க ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அவர்களும் சமயம் பார்த்து தாவுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை எழுந்த நாள் முதல் அதிமுக அதிகபட்ச லைம்லைட்டிலேயே இருந்து வருகிறது.

தினந்தோறும் அதிமுகவில் ஒரு நிகழ்வு நடந்த வண்ணம் இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பை எடப்பாடி பழனிசாமி குறை கூறுவது, இவர்களை ஓபிஎஸ் விமர்சனம் செய்வது, ஆதரவாளர்களை பிடிப்பது என நடைபெறுகிறது.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

தற்போதைய நிலவரப்படி உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகியுள்ளதால் அவருடைய கை ஓங்கியுள்ளது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விசாரணைகள் நடந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு

தீர்ப்பு

இந்த தீர்ப்பு வருவதற்குள் எப்படியாவது தங்கள் பக்கம் வீக்னஸ்ஸாக உள்ள பலத்தை அதிகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் எதிரொலியாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும் ஆர் பி உதயகுமாரின் வலதுகரமுமான உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ் பக்கம் தாவினர்.

எம்எல்ஏக்கள்

எம்எல்ஏக்கள்

இன்னும் பல எம்எல்ஏக்கள் இந்த பக்கம் வருவார்கள் என ஓபிஎஸ்ஸும் ஐயப்பனும் தெரிவித்திருந்தனர். அது மட்டுமல்லாமல் என்னிடமும் ஓபிஎஸ் தரப்பு விலை பேசினர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் தெரிவித்துள்ளார். எனவே கூட்டத்தை சேர்க்க ஓபிஎஸ் தரப்பு தகிடுதத்தங்களை செய்து வருவதாகவே தெரிகிறது.

25 மாவட்டச் செயலாளர்கள்

25 மாவட்டச் செயலாளர்கள்

அந்த வகையில் 25 மாவட்டச் செயலாளர்களை வளைக்கவும் ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். குறிப்பாக தென் மண்டலத்தினரை குறி வைத்து இந்த பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அதாவது சொந்த மண்டலமான தென் பகுதியை வலுவாக்க ஓபிஎஸ் தரப்பு முனைப்பு காட்டி வருகிறதாம். இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பிடம் கேட்ட போது எங்கள் சார்பில் நாங்கள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுதான் எங்கள் அண்ணன் ஓபிஎஸ் அனைவரையும் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளாரே.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

அந்த அழைப்பை ஏற்றுத்தான் பலர் எங்கள் பக்கம் அணி மாறி வருகிறார்கள். ஒரு வேளை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எடப்பாடி தரப்பினர் எங்களை விமர்சிக்கும் அளவிற்கு என்ன தவறு இருக்கிறது? முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதை போல் அவர்கள் செய்த வேலையை நாங்கள் செய்கிறோம் அவ்வளவுதான் என்றார்கள். அதிமுகவில் கிட்டதட்ட 70 மாவட்டச் செயலாளர்கள் இருப்பதாக தெரிகிறது. அவர்களில் 6 அல்லது 7 பேர் ஓபிஎஸ் பக்கமும் மற்றவர்கள் எடப்பாடி பக்கமும் உள்ளனர். தங்களுக்கு ஆதரவு இல்லை ஆதரவு இல்லை என கூறும் எடப்பாடி தரப்பின் வாயை அடைக்க பாதிக்கு பாதி மாவட்டச் செயலாளர்களையாவது பெற்றிருக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு விரும்புகிறதாம். அதன்பேரில்தான் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அது போல் 35 எம்எல்ஏக்களையும் தங்கள் வசம் இழுக்க ஸ்கெட்ச் போட்டாச்சாம். எல்லாமே இபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரட்டும், பிறகு அணிமாறுதல்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+