"லாக்" செய்து "ரிலீஸ்" செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு.. டெல்லியில் பரபரப்பு
காங்கிரஸ் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை தொடர்ந்து, மேலும் 5 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது... அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு, பிறகு உடனடியாக ரிலீஸ் செய்யப்பட்டது.
சமீபத்தில் டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.... அந்த குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து, சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதலும் சொன்னார்..
நிச்சயம் நீதி கிடைக்க துணை இருப்போம் என்றும் அவர்களுக்கு உறுதியளிப்போம் என்றார்.. அப்போது அந்த சிறுமியின் அம்மாவுடன் பேசியது தொடர்பான போட்டோவையும் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சிறுமி
அவ்வளவுதான்.. போக்ஸோ சட்டப்படி, பலாத்காரத்தால் பாதி்க்கப்பட்டச் சிறுமியின் போட்டோ, அவர் குடும்பத்தார், பெற்றோர் போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதோ, நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ சட்டப்படி குற்றமாகும்.. இது போக்ஸோ சட்டத்தின் விதிமுறை மீறலாகும்... என்றெல்லாம் சொல்லி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ட்விட்டர் நிறுவனத்துக்கு லெட்டர் எழுதியது..

கண்டனம்
இதனால் ராகுல் அந்த ட்விட்டர் போட்டோவை உடனடியாக நீக்கினாலும், கடைசியில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. அத்துடன் விடவில்லை.. ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது... அத்துடனும் விடவில்லை.. காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டமூத்த தலைவர்கள் 5 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு விட்டனவாம்.. இதை காங்கிரஸ் கட்சியே தெரிவித்துள்ளது.

5 பேர்
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்புத்துறையின் செயலாளர் வினித் பூனியா ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், பொதுச்செயலாளருமான அஜய் மகான், கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாக்கூர், அசாம் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

முடக்கம்
அனைத்து தவறுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடும். ட்விட்டரில் எங்களை முடக்குவதன் மூலம் போராடுவதை தடுத்துவிடலாம் என மோடி நினைக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த 5 பேரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டரே தற்காலிகமாக முடக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவியது. இதனை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஃபேஸ்புக் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது.. இந்த விவகாரம் பரபரப்பாக எதிரொலித்ததையடுத்து, உடனடியாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications