போன ஜென்ம பாவம்.. வாயை விட்டு வாங்கிக் கட்டும் மகாவிஷ்ணு! ஆக்சனில் இறங்கிய அன்பில்..3 நாளில் சம்பவம்
சென்னை: சென்னை அசோக்நகரில் ஆன்மிக பேச்சு என்ற பெயரில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய 'மாஜி’ ஸ்டாண்ட் அப் காமெடியன் மகா விஷ்ணு குறித்து விசாரிக்க சென்ற போது அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து 3 நாட்களில் அறிக்கை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக பேசி வந்த மகாவிஷ்ணு தற்போது திடீரென ஆன்மீகவாதி அவதாரம் எடுத்திருக்கிறார். தனியாக ஆன்மீக போதனை வகுப்பு நடத்தி வரும் அவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சித்த மருத்துவர் எனக் கூறி காயகல்ப மருந்துகளையும் அவர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் பெற்றுக் கொண்டு ஆன்மீக வகுப்பு என்ற பெயரில் அவர் கல்லாகட்டி வருவதாக புகார் எழுந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்மீகத் தேடல் வகுப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர் மாணவ மாணவிகளின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி கண்களை மூட வைத்து பாடலை ஒழிக்க விட்டு அவர்களை அழ வைத்து இருக்கிறார்.
தொடர்ந்து ஹிப்னாடிசம் செய்தது போல மாணவிகள் பலர் உணர்ச்சிவசப்பட்டு அழுதனர். குறிப்பாக அவரது பேச்சு ஆன்மீகத்தை தவிர்த்து குறிப்பிட்ட மதத்தை உயர்த்தி பேசுவது போலவும், குறிப்பிட்ட சில மத கருத்துக்களை பரப்புவது போல இருந்தது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களை அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.. மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ஒருவர் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார். இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. மேலும் கல்வித் துறையின் முறையான அனுமதியின்றி வகுப்புகளில் ஆன்மீக போதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? இது பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தெரிந்து தான் நடந்ததா? என கேள்வி எழுப்பியதோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி விலக வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனை தொடர்ந்து, இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியின் தலைமை ஆசிரியர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் என்னுடைய ஏரியாவில் என் ஆசிரியரை அவமானப்படுத்திய உன்னை சும்மா விடமாட்டேன் என ஆவேசமாக பேசினார். மேலும் இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை உரிய விசாரணை நடத்தி அறிக்கையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். இது தொடர்பாக இரண்டு நாட்களில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு மூன்று நாட்களில் அறிக்கை அளிக்கப்படும் எனவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பஞ்சாபிகேசன், ஆசிரியர்கள் இந்த விவகாரத்தில் போராட்டம் உள்ளிட்ட எந்தவிதமான பிரச்சினையும் செய்யாமல் இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications