“சத்தியசோதனை”.. மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? இழப்பு என புலம்பும் எண்ணெய் நிறுவனங்கள்
சென்னை: பெட்ரோல், டீசல் விலை எப்போது குறைக்கப்படும் என நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் டீசல் விலை உயர்த்தப்படாததால் தங்களுக்கு லிட்டருக்கு ரூ.3 இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் புலம்பி வருகிறார்களாம்.
பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போது 100 முதல் 110 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர் விலையேற்றம் அத்தியாவசிய பொருட்கள் விலை, போக்குவரத்து கட்டணம் உயர்ந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 500 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அதே நிலை நீடித்து வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமடைய செய்தது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததால் எண்ணெய் நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வருவதாக கூறப்படும் நிலையில் டீசல் விற்பனையால் அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 3 ரூபாய் இழப்பை சந்தித்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் புலம்பி வருகிறார்களாம். பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் பங்கு இந்திய எண்ணெய் சந்தையில் 90 சதவீதமாக உள்ளது.
இந்த நிலையில், கடந்த சுமார் 2 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் உள்ளன. 85 சதவீதம் இறக்குமதி இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் நிலையில், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளதால் அதன் வருவாய் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது கச்சா எண்ணெய் விலை சா்வதேச அளவில் சரிந்தாலும் ரஷியா - உக்ரைன் போர் காரணமாக 14 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
சமீப காலமாக கச்சா எண்ணெய் விலை சா்வதேச அளவில் அதிகரித்து வரும் நிலையில், விலை உயர்த்தப்படாததால் டீசல் விற்பனையில் லிட்டருக்கு 3 ரூபாய் இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து உள்ளனவாம். அதேபோன்று பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் வருவாய் அளவும் சரிவடைந்து உள்ளதாக கூறுகிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் வட்டாரத்தில் எழுந்து இருக்கும் இந்த பேச்சு மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications