பழைய பென்ஷன் திட்டத்தை தொடர என்ஜிஓ சங்கம் சூப்பர் ஐடியா.. ஓய்வூதிய திட்ட ஆய்வுக்குழுவிடம் கருத்து
சென்னை: சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் குழுவினர், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.. அப்போது, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய, தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.. இந்நிலையில், என்ஜிஓ சங்க நிர்வாகிகள், அரசுக்கு நஷ்டம் ஏற்படாமல், பழைய பென்ஷன் திட்டத்தை எளிதாக எப்படி அமல்படுத்தலாம்? என்பது குறித்த யோசனையை ஓய்வூதிய திட்ட ஆய்வுக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 1.4.2003 முதல் ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை, அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் 22 ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றன.

மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அதை ஏற்காமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவேதான், சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்வதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
3 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழுவானது, ஒன்பது மாதத்துக்குள் துன்னுடைய அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்த குழுவினர், 4 கட்டங்களாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்க முடிவெடுத்துள்ளனர்.
தொடரும் கருத்து கேட்பு கூட்டங்கள்
அதன்படி கருத்துக்கூட்டங்கள் ஒவ்வொன்றாக நடந்து வருகின்றன.. இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் 2 பேர் வீதம் அனுமதிக்கப்பட்டு, 3 நிமிடங்கள் அவர்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன..
செப்டம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளிலும் அடுத்தகட்ட கருத்து கேட்பு கூட்டம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியானது.. இதனிடையே, சமீபத்தில் இக்குழுவை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (NGO சங்கம்) நிர்வாகிகள் மாநில தலைவர் மகேந்திரகுமார் தலைமையில் பொதுச் செயலாளர் தேசிங்குராஜன், துணைத் தலைவர் ஆலீஸ்ஷீலா, துணைத்தேர்தல் அலுவலர் பத்மினி, விழுப்புரம் மாவட்ட தலைவர் நாகராஜன் சந்தித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
என்ஜிஓ சொன்ன யோசனை
இதுகுறித்து மாநில தலைவர் மகேந்திர குமார் சொல்லும்போது, "தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தபிறகு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அலுவலர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து மத்திய அரசு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு 18.5 சதவீதம், ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதம் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு வழங்கும் 18.5 சதவீதத்தை மாதா மாதம், மாநில அரசே வழங்கி அதனை ஓய்வு பெறும் காலம் வரை தொடர்ந்து சேர்த்து வைக்க வேண்டும். ஓய்வு பெறும் காலத்தில் அந்த மொத்த தொகையையும், வட்டியுடன் சேர்த்தாலே, பழைய ஓய்வூதிய திட்டத்தை எளிதாக நடைமுறைப்படுத்தி விடலாம். இதனால் அரசுக்கும் நிதிச்சுமை ஏற்படாது..
சிறப்பு கால முறை ஊதியம்
பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும். அரசு ஊழியர்களின் தலைமுறைக்கும் இது பாதுகாப்பு அளிப்பதால், உடனடியாக பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்... எங்களது இந்த கருத்தை, இக்குழுவானது அரசுக்கு பரிந்துரைத்து, செயல்படுத்த வேண்டும்.
அத்துடன், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோர், ஒப்பந்த, தினக்கூலி பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7800 நிர்ணயம் செய்ய வேண்டும்" என்றெல்லாம் தன்னுடைய ஆலோசனையை தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications