நாங்க வாங்குறோம்..! அரசு பஸ்ஸில் அப்படி சொல்ல.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை : அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்கவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஆம்னி பேருந்தில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படுவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசுப் பேருந்துகளில் வரும் 23ஆம் தேதி முதல் டிக்கெட் வழங்கும்போது 2000 ரூபாய் நோட்டுகள் பேருந்துகளில் வாங்க வேண்டாம் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து நடத்துனர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடம் வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்த இயலாத நிலை உள்ளதால், மே 23 முதல் அரசு பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து ரூ.2,000 நோட்டை வாங்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தின் கணக்குத் துறை மேலாண் இயக்குநர், ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படுவதாக அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்துள்ள நிலையில், ஆம்னி பேருந்துகள் 2000 ரூபாய் நோட்டிகளை வாங்கவுள்ளன.












Click it and Unblock the Notifications