காந்தி உருவப்படத்திற்கு அவமரியாதை... 4 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. திருமாவளவன் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காந்தி உருவப்படத்திற்கு அவமரியாதை செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தொல்.திருமாவளவன்- வீடியோ
சென்னை : இந்து மகா சபை பொறுப்பாளர்களை கைது செய்யக்கோரி வருகிற 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு அவமதித்த இந்து மகா சபையை சேர்ந்த பூஜா ஷகுன் பாண்டே உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்றார்.

மேலும், இந்த சம்பவத்துக்கு இதுவரை பிரதமர் மோடியோ மத்திய அரசோ கண்டனம் தெரிவிக்காதது அவர்களும் இதை ஆதரிக்கிறார்கள் என்பதையே உணர்த்துகிறது என்று குற்றம்சாட்டி உள்ளார்.
இந்து மகாசபை என்ற அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்ய வேண்டும் என பாஜக அரசை வலியுறுத்துகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications