செல்போனில் மூழ்கிய மும்தாஜ்.. பால்கனியில் இருந்து தவறி விழுந்து இறந்த குழந்தை.. சென்னையில்!
பால்கனியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியாகி உள்ளது
சென்னை: செல்போனில் அப்படியே மூழ்கி போய்விட்டார் மும்தாஜ்.. அதனால் தன் குழந்தை பால்கனியில் இருந்து கீழே விழுந்ததைகூட கவனிக்கவில்லை... தாயின் அலட்சியத்தினால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சையத் அபுதாகீர். டீக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மும்தாஜ்.. 30 வயதாகிறது.. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இர்பான் இவர்களது 2வது மகன்.. ஒன்றரை வயசு குழந்தை.

இவர்களது வீடு 2-வது மாடியில் உள்ளது. நேற்று முன்தினம் சையத் டீக்கடைக்கு சென்றுவிட்டார். வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டு மும்தாஜ் இர்பானுக்கு சாப்பாடு ஊட்டி உள்ளார்.
அப்போது, ஒருசெல்போன் அழைப்பு வரவும் இர்பானை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்குள் வந்து செல்போன் எடுத்து பேசியுள்ளார். அந்த சமயத்தில், திடீரென இர்பான் அழுகை சத்தம் கேட்கவும், மும்தாஜ் ஓடிப்போய் பால்கனியில் எட்டி பார்த்தார்.
அப்போது, அவரது கண் முன்னாடியே குழந்தை கீழே விழுந்தான்.. இதை பார்த்து பதறிக் கொண்டு ஓடினார் மும்தாஜ்.. அக்கம்பக்கத்தினரும் குழந்தைவிழுந்ததை பார்த்துஅலறி அடித்து ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் விழுந்தது கிடந்த இர்பானை தூக்கி கொண்டு, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஓடினர்.. ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
இதுகுறித்து, வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். குழந்தை மாடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications