நல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்!
சென்னை: தென்கொரியாவில் இருந்து ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஏற்கனவே 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ள நிலையில் கூடுதலாக ஒரு லட்சம்கருவிகள் வந்திருப்பதால் பரிசோதகளை அரசால் இன்னும் கூடுதலாக செய்ய முடியும் என்பதால் இனி நல்ல மாற்றம் வரும் என நம்பலாம்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளி எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய சோதனகளை நடத்துவதும் முக்கியம் ஆகும். கொரோனா பரவலைதடுக்க இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிக அளவு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கேரளா, தமிழகம் ஆகியவை மருத்துவ கட்டமைப்பில் மிக வலுவாக உள்ள மாநிலங்கள் ஆகும். குறிப்பாக தமிழகம் மிக வலுவாக உள்ளது.

தமிழகத்தில் அதிகம்
தமிழகத்தில் தான் மிக அதிகப்படியான மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அடிப்படை மருத்துவக்கட்டமைப்பிலும் தமிழகம் ஓரளவிற்கு நல்ல நிலையில்தான் உள்ளது. இதனால் தான் கொரோனா பரவிய போதும் மிக விரைவாக சோதனைகளை தமிழகம் அதிகப்படுத்தியது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 95 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

உயிரிழப்பு குறைவு
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் 4 ஆயிரத்திற்கு மேல் பரவி வந்த போதிலும் உயிரிழப்பு என்பது சராசரியாக 60 என்ற அளவில் தான் உள்ளது. இதேபோல் குணம் அடைவோர் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகமாகி வருகிறது,

10 லட்சம் கருவிகள்
இந்நிலையில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த தமிழக அரசு தென்கொரியாவிடம் 10லட்சம் பிசிஆர் கருவிகளை ஆர்டர் செய்திருந்தது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தென்கொரியாவில் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. 10 லட்சம் பிசிஆர் கருவிகளில், 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் ஏற்கனவே இருப்பில் உள்ளன.இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன. இதனால் தமிழகத்தில் பிசிஆர் கருவிகளின் எண்ணிக்கை 6.6 லட்சம் மாக உயர்ந்துள்ளது.

பாதிப்பு குறைய வாய்ப்பு
எனவே இனி கொரோனா பரிசோதனை தமிழகத்தில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய நிலையில் தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications