Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒரே நாடு ஒரே தேர்தல்" ஏன் பயப்பட வேண்டும்.. திமுகவை சீண்டிய ஜெயக்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் திமுக அச்சப்படுவதால் தான் எதிர்க்கிறார்கள் என்றும் இல்லையெனில் ஏன் தேர்தலை கண்டு பயப்பட வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே அவ்வப்போது பேசி வருகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு இதுகுறித்த பேச்சு எழுந்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் இந்த சூழலில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

One nation, one election why should be afraid, Jaikumar attacked DMK

செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பல்வேறு யூகங்கள் கிளம்பின. குறிப்பாக மத்திய அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே பாஜக அரசு இதுபோன்ற ஒரு தகவலை கிளப்பி விடுவதாகவும் பரவலாக பேச்சு அடிபடாமல் இல்லை. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை வரவேற்பதாக கூறியிருந்தார்.

One nation, one election why should be afraid, Jaikumar attacked DMK

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் திமுக அச்சப்படுவதால் தான் எதிர்க்கிறார்கள் என்றும் இல்லையெனில் ஏன் தேர்தலை கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:- எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆகியினும் அமைச்சர் உதயநிதி பேசியிருப்பதை விரும்ப மாட்டார்கள்..

One nation, one election why should be afraid, Jaikumar attacked DMK

நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை திசை திருப்பவே இப்படி பேசியிருக்கிறார். நாட்டில் பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரிகிறது. இதனை திசை திருப்பத்தான் இப்படி ஒரு முயற்சி.. தேர்தலை கண்டு ஏன் பயப்பட வேண்டும். தைரியமாக சொல்ல வேண்டியது தானே.. எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்துங்கள்... நாங்கள் சந்திக்கிறோம்.. எங்க ஆட்சி தான் வரும் என்று.. உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா?.. ஆனால் நாங்கள் சொல்கிறோம்.. எப்போது வேண்டுமானாலும்.. ஏன் நாளைக்கே தேர்தல் வைத்தால் கூட நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+