"ஒரே நாடு ஒரே தேர்தல்" ஏன் பயப்பட வேண்டும்.. திமுகவை சீண்டிய ஜெயக்குமார்!
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் திமுக அச்சப்படுவதால் தான் எதிர்க்கிறார்கள் என்றும் இல்லையெனில் ஏன் தேர்தலை கண்டு பயப்பட வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே அவ்வப்போது பேசி வருகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு இதுகுறித்த பேச்சு எழுந்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் இந்த சூழலில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பல்வேறு யூகங்கள் கிளம்பின. குறிப்பாக மத்திய அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே பாஜக அரசு இதுபோன்ற ஒரு தகவலை கிளப்பி விடுவதாகவும் பரவலாக பேச்சு அடிபடாமல் இல்லை. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை வரவேற்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் திமுக அச்சப்படுவதால் தான் எதிர்க்கிறார்கள் என்றும் இல்லையெனில் ஏன் தேர்தலை கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:- எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆகியினும் அமைச்சர் உதயநிதி பேசியிருப்பதை விரும்ப மாட்டார்கள்..

நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை திசை திருப்பவே இப்படி பேசியிருக்கிறார். நாட்டில் பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரிகிறது. இதனை திசை திருப்பத்தான் இப்படி ஒரு முயற்சி.. தேர்தலை கண்டு ஏன் பயப்பட வேண்டும். தைரியமாக சொல்ல வேண்டியது தானே.. எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்துங்கள்... நாங்கள் சந்திக்கிறோம்.. எங்க ஆட்சி தான் வரும் என்று.. உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா?.. ஆனால் நாங்கள் சொல்கிறோம்.. எப்போது வேண்டுமானாலும்.. ஏன் நாளைக்கே தேர்தல் வைத்தால் கூட நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications