சென்னையை அதிர வைத்த ஏ.டி.எம் கொள்ளை.. ஒருவர் சிக்கினார்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
சென்னை: சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் லட்சக்கணக்கில் திருடியதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் கடந்த வாரங்களாக நூதன முறையில் கொள்ளையடித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை வேளச்சேரி, விஜயநகர் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎமில் கடந்த 18 மற்றும் 19ம் தேதி பணமெடுக்கும் மெஷினில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டிய நிலையில், 8 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.

பகீர் திருட்டு
இது குறித்து மேலாளர் சென்னை போலீசில் புகார் கொடுத்தனர். இதேபோல் தரமணி , எஸ்ஆர்பி டூல்ஸ் உள்ளிட்ட வங்கிகளிலும் வங்கி ஏடிஎம்களில் லட்சக்கணக்கில் பணம் மாயமானது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் ஒரே டெபிட் கார்டை பயன்படுத்தி வடமாநிலத்தை சேர்ந்த சிலர் சுமார் 50 லட்சத்திற்கும் மேலாக கொள்ளையடித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹரியானா தப்பிச் சென்றனர்
முதலில் சென்னை போலீசார் விசாரித்த இந்த வழக்கு பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. கேஸ் டெபாசிட் மிஷனுக்கே தெரியாமல் மிக நுட்பமாக இந்த கொள்ளை நடந்துள்ளதால் போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கினார்கள். பணத்தை திருடிய கும்பல் ஹரியானாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது.

ஒருவர் கைது
இதனை தொடர்ந்து தி.நகர் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் உடனடியாக ஹரியானா சென்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அமிர் அர்ஷ் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 ½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட அமிர் அர்ஷிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

திட்டமிட்டு கொள்ளை
அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது இந்த கும்பல் சென்னையில் 15.6.2021 முதல் 18.6.2021 வரை 14 இடங்களில் SBI ATMகளில் சுமார் ரூ.45 லட்சம் பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் 5 பேர் குழுக்களாக இருந்துள்ளனர். சென்னையில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு ஏடிஎம் மையங்களில் பணத்தை திருடியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களையும் கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications