ஓய்வு பெற்ற கலெக்டருக்கு 35 ஆயிரம் சம்பளம்.. காரைக்கால் பக்கம் நிலம் கையகப்படுத்த ஓஎன்ஜிசி தீவிரம்
சென்னை: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் ஆகிய திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளது ஓஎன்ஜிசி நிறுவனம்.
ஹைட்ரோ கார்பன் புதிய ஆய்வுக்காக தமிழக சுற்றுச்சூழல் குழுவிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்தது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை என்று சுற்றுச்சூழல் குழு மறுத்து விட்டது.

வல்லுநர் குழு
அதேநேரம், இந்த மாவட்டத்திற்கு வெளியே எண்ணெய் உற்பத்தி எடுக்க விண்ணப்பித்தால், அதன் பாதிப்புகளை கண்டறிய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் சமீபத்தில் அறிவித்தார். மேலும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி கேட்ட அனுமதியை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது.

காரைக்கால்
இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் நிலங்களை கையகப்படுத்த ஓய்வு பெற்ற நில அளவையர், ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியர் மற்றும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஆகியோரை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துள்ளது ஓஎன்ஜிசி நிறுவனம்.

விளம்பரம்
இது தொடர்பாக தினசரி பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவலையும் தெரிவித்துள்ளனர். ஓய்லு பெற்ற துணை கலெக்டருக்கு 35 ஆயிரம் சம்பளம், ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு 33 ஆயிரம் சம்பளம், ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு 30 ஆயிரம் சம்பளம், ஓய்வுபெற்ற நில அளவையருக்கு 25000 சம்பளம், இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன்
எப்படியாவது இந்த மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த ஓஎன்ஜிசி மும்முரமாக இருப்பதை இந்த விளம்பரம் உறுதியாகத் தெரிவிக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications