புத்தாண்டிலும் குறையாத வெங்காய விலை.. டிடிஎச், செல்போன் ரீசார்ஜ், ரயில் கட்டணமும் கிடுகிடு
சென்னை: 2020 புத்தாண்டு பிறந்துள்ள போதிலும்கூட வெங்காயத்தின் விலை இன்னும் ஏறுமுகத்தில்தான் இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பருவமழை அதிகமாகப் பெய்ததால் வெங்காயம் பயிரிடக்கூடிய பகுதிகளில் வெங்காய செடிகள் அழிவடைந்ததால், அவற்றின் விலை அதிகரித்துள்ளது என்று அரசு தரப்பு தெரிவிக்கிறது.

இருப்பினும் நமது நாட்டில் போதிய அளவுக்கு காய்கறிகளை சேமித்து வைக்க தேவையான குளிர்பதன வசதி கொண்ட கிட்டங்கி வசதி அதிக அளவுக்கு இல்லாதது, வெங்காய பதுக்கல், இந்த நிலையை முன்கூட்டியே அரசு கணிக்கத் தவறியது, போன்றவை வெங்காய விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இப்போதும்கூட ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 200 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 120 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்து மக்களுக்கும் வெங்காயம் என்பது எட்டா காய்கறியாக மாறிப் போய்விட்டது. மிகக் குறைந்த அளவில்தான் அவர்கள் வெங்காயத்தை வாங்கி சமையலில் பயன்படுத்துகிறார்கள். மாத பட்ஜெட்டில் பெருமளவு காய்கறி விலைக்கே செலவிடுவதால் வேறு விஷயங்களுக்கு செலவிட கையில் பணம் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதோ குறைகிறது, அதோ, குறைகிறது என்று அரசு தொடர்ந்து கூறி வந்தாலும் கூட, பல வாரங்களாக வெங்காயத்தின் விலை குறைந்தபாடில்லை. ஆனால் நாட்டில் குடியுரிமை சட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மக்களின் கவனம் இருப்பதால் இது வெளிச்சத்துக்கு வரவில்லை.
அரசும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் குறியாக இருக்கும் நிலையில், விலைவாசி உயர்வு என்பது கட்டுக் கடங்காமல் சென்றுகொண்டே இருக்கிறது.
ஒரு பக்கம் காய்கறிகளின் விலை, மறுபக்கம் டிராய் நெறிமுறைகள் காரணமாக டிடிஹெச் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு, மற்றொரு பக்கம் செல்போன் கட்டணங்கள் அதிகரிப்பு, ரயில் கட்டணம் அதிகரிப்பு போன்ற இவை அனைத்தையும் கூட்டிப் பார்த்தால் மாத இறுதியில் எப்படியும் 3000 முதல் 5000 ரூபாயாவது பாக்கெட்டிலிருந்து அதிகம் செலவழிக்க வேண்டிய நிலையில்தான் மக்கள் உள்ளனர்.
உதாரணத்திற்கு முன்பு, 3 மாதங்களுக்கு ரூ.400 வசூலித்த ஒரு செல்போன் நிறுவனம், இப்போது 2 மாதங்களுக்கே அதை வசூலிக்கிறது. விரும்பிய சேனல்களை காசு கொடுத்து பார்க்கலாம் என அறிவித்த பிறகு டிடிஎச் சேவை கட்டணங்கள் 50 சதவீீதம் வரை கூடிவிட்டன.
இது சாமானிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய சுமை ஆகும். இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது இதுவரை தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
மற்றொரு பக்கம் வியாபாரிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, இன்னும் 30 நாட்கள் அல்லது அதற்கு முன்பாக வெங்காயத்தின் விலை ஓரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம் காரீப் பருவத்தில் செய்யப்பட்ட வெங்காய சாகுபடி விளைச்சல் இந்த மாத இறுதியில் சந்தைக்கு வரத் தொடங்கும். அப்போது ஒரு கிலோ வெங்காயம் 50 முதல் 60 ரூபாய் என்ற அளவுக்கு குறைவடையும் வாய்ப்பு உள்ளது, என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications