பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி!
சென்னை: தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போதும் ஆவணங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதியை பத்திரப்பதிவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பத்திரப்பதிவு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணைய வழியே ஆவணப் பதிவு முறையை பதிவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24X7X365) இணையதளத்தின் மூலம் இணைய வழி தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

ஆவணப் பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார் பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் உள்நுழைவிற்கும் அலைபேசிக்கு வாட்ஸ் ஆப் மூலமும் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தங்கள் உள்நுழைவு வழியே தரவிறக்கும் செய்து கொள்ளலாம்.
வருகை இல்லா ஆவணப் பதிவு (Anywhere Registration) நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.


சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யக் கூடிய ஆவணங்கள்:
- முதல் விற்பனை பனை (First sale of plot)
- முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (first sale of flat)
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள்
- வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள்
பொதுமக்கள் கட்டுமான நிறுவனங்கள் ஆவண எவுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கவனத்திற்கு
பதிவுத் துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவை தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை (ரசீது) இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள் எழுதி பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்ய வேண்டும்.
ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.
தொழில்நுட்ப தேவைகள்
இணைய இணைப்பு
UDAI அங்கீகரிக்கப்பட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் கவரும் கருவி
புகைகப்படக் கருவி (வெப்கேமரா)
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
வன்பொருள்
முகமது யூனூஸ் 7397574067
அருண்குமார்- 9940446694
மென்பொருள்
சீனிவாஸ் கணேஷ் - 6369798973
டில்லி பாபு- 8525805957
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications