அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்... ஓபிஎஸ்-ன் திடீர் ட்வீட் சொல்லும் சேதிதான் என்ன?
சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற விவாதம் வெடித்திருக்கும் நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிவிட்டிருக்கும் ட்வீட் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து முதலில் சர்ச்சையை கிளப்பியவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவர்தான் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான பிள்ளையார் சுழி போட்டார்.

செல்லூர் ராஜூ கருத்து
மதுரை நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜூ, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, தானே முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. மக்கள் சொன்னார்கள். அதேபோல, ஜெயலலிதாதான் முதல்வராக வேண்டும்' என்று மக்கள் வலியுறுத்தினார்கள். எம்.எல்.ஏக்கள் கூடி, யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறார்களோ அவர்தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றார்.

ராஜேந்திர பாலாஜி பதில்
இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் தந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் எங்களுக்கு என்றும் முதல்வர். எடப்பாடியாரை முன்னிறுத்தியே களம் காண்போம்; வெற்றி பெறுவோம் என்றார் ராஜேந்திர பாலாஜி. செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோரது பகிரங்க கருத்துகள் அதிமுகவில் விவாதத்தை புயலென கிளப்பிவிட்டது.

அமைச்சர் உதயகுமார்
முதல்வர் எடப்பாடியாரை முன்னிறுத்தியே தேர்தல்களை சந்தித்தோம். 2021 தேர்தலையும் எடப்பாடியரையே முன்னிறுத்தி சந்திப்போம் என்று அமைச்சர் உதயகுமாரும் கருத்து தெரிவித்தார். இப்படி அதிமுகவில் ஆளுக்கு ஒருவராக முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்க தொடங்கினர். இந்த நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீரென ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

ஓபிஎஸ் திடீர் ட்வீட்
அந்த ட்வீட்டில், தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்! என பொதுவாக ட்விட் செய்திருக்கிறார் ஓபிஎஸ். அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதற்காக்வே இந்த பதிவை ஓபிஎஸ் வெளியிட்டிருக்கிறார்.

தேர்தலுக்கு பின் முதல்வர் தேர்வு
அதனால்தான் எம்ஜிஆரின் பாடலான, தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! என்கிற பாடலையும் ஓபிஎஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறார். சட்டசபை தேர்தலுக்குப் பின் முதல்வர் யார் என்பதை முடிவு செய்யலாம் என்பதாகவே ஓபிஎஸ்ன் பதிவு வெளிப்படுத்துகிறது. அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவும் ஓபிஎஸ் இப்படி ஒரு ட்வீட் போட்டிருக்கிறார் என்பதே அதிமுகவினரின் கருத்து.
-
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்! -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications