தமிழக மக்களுக்கு வார்னிங்.. ‛காவு’ வாங்கும் கள்ளக்கடல் நிகழ்வு! நாளை மாலை வரை கடலுக்குள் செல்லாதீங்க
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்த தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், தமிழக கடலோர மாவட்டங்களுக்கு 'கள்ளக்கடல்' குறித்து ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்ததிருக்கிறது கடல்சார் ஆய்வு மையம்.
தமிழகத்தில் கத்திரி வெயில் நேற்று தொடங்கியுள்ளது. இதற்கு முன்னரே பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் மேலும் நீடிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மறுபுறம் கடலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது திடீரென ராட்சத அலைகள் மேலெழுந்திருப்பதால் கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த கடல் மாற்றத்தை ஆய்வாளர்கள் கள்ளக்கடல் நிகழ்வு என என கூறுகின்றனர். சற்றும் எதிர்பாராத தருணத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என்பதால் கேரளாவில் இதனை, கள்ளக்கடல் நிகழ்வு என அழைக்கின்றனர். இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும், எச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்றின் விளைவே இப்படி கள்ளக்கடல் நிகழ்வு உருவாகக் காரணமாகும்.
புயல், காற்றழுத்த தாழ்வு பகுதி போன்ற காலங்களில் மட்டுமே கடலின் அலைகள் சீற்றமாக இருக்கும். சில நேரங்களில் ஆழ்கடலில் பலத்த காற்று ஏற்படுத்தும் தாக்கமும் இதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
அப்படியான நிகழ்வுதான் தற்போது இந்திய பெருங்கடலில் ஏற்பட்டிருக்கிறது. எனவே நேற்றும் இன்றும் தமிழகத்தின் கடல்சார் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்படிருந்தது. கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கள்ளக்கடல் நிகழ்வின் போது கடல் நீர், கடற்கரையை தாண்டி உள்ளே வரும். பலர் சுனாமியுடன் இதனை ஒப்பிட்டு குழப்பிக்கொள்வார்கள். ஆனால், சுனாமி வேறு, கள்ளக்கடல் நிகழ்வு என்பது வேறு. கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்படும்போது கடலில் குளிக்கவோடு, விளையாடவோ கூடாது. கரையில் போதுமான தூரத்தில் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
இன்று கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ள தேங்காய்பட்டிணம் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி அலையில் அடித்து செல்லப்பட்டிருக்கிறார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு கள்ளக்கடல் நிகழ்வுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
எனவே நாளை மாலை வரை தமிழக கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று கடல்சார் ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications