ரெடியான ஆக்சிஜன் மையங்கள்.. இனி தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளிலேயே உற்பத்தி.. புது நம்பிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன. சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் குறைந்து கொண்டே வந்தாலும் இன்னும் சில வாரங்களில் மிகப்பெரிய மூன்றாம் அலை ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இன்னொரு பக்கம் ஏற்கனவே மூன்றாம் அலை தொடங்கிவிட்டது, இனிமேல்தான் இந்தியாவில் கேஸ்கள் அதிகரிக்கும் என்றும் சில மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தயார் நிலை
தமிழ்நாட்டில் தற்போது 3 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்தாலும், எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் அலை ஏற்படும் வாய்ப்பு நிலவி வருகிறது. முக்கியமாக லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே அதிக அளவில் செல்ல தொடங்கி உள்ளனர். இது கொரோனா கேஸ்களை அதிகரித்து மூன்றாம் அலைய ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

ஆக்சிஜன்
கொரோனா இரண்டாம் அலையின் போது நாடு முழுக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வந்தது. டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் மரணம் அடைந்தனர். அதிலும் உத்தர பிரதேசத்தில் தினமும் பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் மரணம் அடைந்த அவலம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அப்படி அசம்பாவிதம் ஏற்படவில்லை என்றாலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது.

கடைசி நொடி
தினமும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு வருவதற்காக அமைச்சர்கள், எம்பிக்கள் களத்தில் நின்று பல மணி நேரம் உழைத்தனர். ஆக்சிஜன் லாரி வரும் கடைசி நொடி வரும்.. என்ன நடக்குமோ என்ற பதற்றம் தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் நிலவியது. ஆனால் ஓருருவழியாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் தமிழ்நாடு அரசு இரண்டாம் அலையின் போது தப்பித்துவிட்டது.

மீண்டும்
இந்த நிலையில் மூன்றாம் அலையின் போது இப்படி பதட்டம் ஏற்பட கூடாது என்பதால் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுக்க இருக்கும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை கட்டி உள்ளது. மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அரசு கட்டி உள்ளது. சென்னை, திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர் என்று பல மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் திறக்கப்பட்டுவிட்டன.

சென்னை
நேற்று சென்னையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மையங்களின் கட்டுமானம் முடிந்து, செயல்பட்டுக்கு வரும் நிலை உள்ளது. இங்கு ஏற்கனவே சிறிய அளவிலான ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானம்
மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனை தொடங்கி கோவை, சென்னையில் இருக்கும் பெரிய பெரிய அரசு மருத்துவமனைகள் வரை பல இடங்களில் உற்பத்தி மையங்கள் கட்டப்பட்டு ஆக்சிஜன் தொடங்கும் நிலை உள்ளது. மூன்றாம் அலை ஏற்பட்டால் ஆக்சிஜனை வெளியில் இருந்து வாங்கி அது தமிழ்நாடு வரும் வரை காத்திருக்க முடியாது. அதற்கு மாற்றாக தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அரசு அமைத்துள்ளது.

நம்பிக்கை
ஏற்கனவே கடந்த இரண்டாம் அலையின் போதே ஆக்சிஜன் படுக்கைகள் உயர்த்தப்பட்டுவிட்டன. இப்போது ஆக்சிஜன் உற்பத்தி மையங்களும் கொண்டு வரப்பட்டுள்ளதால், மூன்றாம் அலையை தமிழ்நாடு சமாளித்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாம் அலையின் போது தினசரி ஆக்சிஜன் தேவை சராசரியாக 270 - 400 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications