ப.சிதம்பரம் கைது.. போர்க்களமான சத்தியமூர்த்தி பவன்.. போராடிய குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் கைது
Recommended Video
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பாக காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.
நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஒன்றுகூடி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை மேலும் முன்னேற விடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.

தடுப்புகளை மீறி செல்ல காங்கிரஸ் தொண்டர்கள் முயற்சி செய்ததால், அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சத்தியமூர்த்தி பவன் பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.
பின்னர் அண்ணா சாலை நோக்கி தொண்டர்கள் ஊர்வலமாக செல்ல முயற்சி செய்தனர். ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையும் மீறி பேரணி செல்ல முயற்சி செய்த காங்கிரஸ் தொண்டர்கள், சுமார் 150 பேரை காவல்துறையினர் கைது செய்து வேன்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

இந்தப் போராட்டத்தில் கோபண்ணா, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், சென்னையின் 8 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications